Saturday, March 26, 2011

நம்பிக்கையில் நான் நம்பிக்கை கொள்வதில்லை.



நம்பிக்கையில் நான் நம்பிக்கை கொள்வதில்லை.

அறிதல் தான் எனது அணுகுமுறை.மேலும்
அறிதல் என்பது முற்றிலும் வேறுப்பட்ட ஒரு பரிமாணம்.
அது சந்தேகிப்பதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
அது நம்பிக்கை கொள்வதிலிருந்து ஆரம்பிப்பதில்லை.
ஏதோ ஒன்றினை நம்பி விடுகின்ற அந்த நொடிப்
பொழுதே நீங்கள் விசாரிப்பதை நிறுத்தி விடுகிறீர்கள்.
மனிதனின் புத்திசாலிதனத்தை அழிப்பதில் இந்த
நம்பிக்கை என்பது மிகவும் விஷம் நிறைந்த ஒன்றாகும்.

எல்லா மதங்களும்,நம்பிக்கையை அடிப்படையாகக்
கொண்டுதான் இருக்கின்றன.விஞ்ஞானம் மட்டுமே
சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
ஆனால் மதம் சார்ந்த விசாரணை கூட விஞ்ஞானப் பூர்வமானதாகவும்,

சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் 
என்று நான் விரும்புகின்றேன்.

அப்போதுதான் நமது இருப்புணர்வின் உண்மையையும்,இந்த முழு 

பிரபஞ்சத்தின் உண்மையையும் நம்பிக்கை கொள்ள வேண்டிய 
அவசியம் இல்லாமலேயே என்றாவது ஒருநாள் நாம் அறிந்து கொள்ளமுடியும்.
Download As PDF

No comments: