Wednesday, December 14, 2011

நட்பும், நட்புணர்வும் அன்பின் மிக சிறந்த நறுமணமாகும்.



நட்புணர்வு என்பது யாரைக் குறித்துமான,
யாரை நோக்கியுமான அன்பு அல்ல. அது பேச்சாலோ
அல்லது வேறு விதத்திலோ செய்துகொண்ட எந்த ஒப்பந்தமும் அல்ல.

அது ஒருதனிநபருக்கும் மற்றொரு தனிநபருக்கும் இடையே ஆனதல்ல.
மாறாக அது ஒரு தனிநபருக்கும் முழு இயற்கைக்குமானது.
மேலும் அதில் மரங்களும் விலங்குகளும் நதிகளும் மலைகளும்
விண்மீன்களும் அடங்கும். எல்லாமே நட்புணர்வுக்குள் அடங்கி விடுகிறது.

உனது மௌனம் வளர்வதைப் போலவே உனது நட்புணர்வும் வளரும்,
உனது அன்பும் நேசமும் பிரியமும் வளரும்.பொறாமை மறையும்
போது அங்கு ஆழமான நட்புணர்வு மலரும்.

வாழ்வு ஒரு கண்ணாடி, அதனுடன் நட்புணர்வு கொள் –
வாழ்வு அனைத்தும் நட்புணர்வையே பிரதிபலிக்கும்.

நட்பும், நட்புணர்வும் அன்பின் மிக சிறந்த நறுமணமாகும்.
மனதுடன் நட்பு கொள், அதை ஆழ்ந்த நட்புணர்வுடன் கவனி.

நட்புணர்வு எதையும் எதிர்பார்ப்பதில்லை, 
அது எந்த விதத்திலும் கட்டாயப்படுத்துவதில்லை.
Download As PDF

சிந்தித்து தெளிந்து இரண்டற கலப்பதுவே முக்தியாம்.





என்னை அறிவென்றான் என் அறிவில் ஆனந்தந்
தன்னைச் சிவமென்றான் சந்ததமும் – என்னைஉன்னிப்
பாரா மறைத்ததுவெ பாசமென்றான் இம்மூன்றும்
ஆராயந் தவர்முத்த ராம்.-சிவபோக சாரம் 


என் உடல்,என் மனம் என்னும் இவை என் உடைமைகள் அன்றி நானில்லை.
எங்கே எனது என்று பகுக்க முடியாமல் அறியும் இந்த "நான்" மட்டும்
எஞ்சி இருக்கிறதோ அந்த அறிவே நீயாம்!

நான் என்ற இந்த அறிவும் (நினைவும்) தோன்றி மறைவதால்,
(நினைப்பும்,மறப்புமாய் இருப்பதால்)-அதன் தோற்றதிற்கும்,மறைவிற்கும்
ஆதாரமான ஒரு பொருள் இருக்கவேண்டும்.அறிவிற்கறிவான அந்த
ஆதாரநிலையே ஆனந்தமயமான சிவமாம்.
(இன்பதுன்பமற்ற நிலையே ஆனந்தம்).

அறிவான தன்னையும்,தனக்கு ஆதார தலைவனையும் மறைப்பதுவே
ஆணவமாகிய இருளாம்.ஆணவம்,கன்மம்,மாயை இவையே பாசமாம்.

அறிவாகிய தன்னையும்,
இந்த நினைவிற் ஆதார அறிவையும்,
இவ்விரண்டையும் அறிய ஒண்ணாது மறப்பது
ஆகிய இம்மூன்றையும் சிந்தித்து தெளிந்து இரண்டற கலப்பதுவே முக்தியாம்.
Download As PDF