Friday, September 4, 2015

அறிதலும் ! புரிதலும் !



அறிதலும் ! புரிதலும் !

ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் வித்யாசம் உண்டு. அறிந்து கொள்வதற்கு அனுபவம் தேவையில்லை! புரிந்துகொள்வதற்கு அனுபவம் தேவை. ஒரு பழத்தின் சுவையை எப்படியெல்லாம் ஏட்டில் புனைந்தாலும் அதன் சுவையை சுவைத்தாலன்றி அறிய இயலாது! மேலும் பழத்தின் சுவையை கொண்டு அதன் வகையும் ஏராளம். அனுபவித்தவனே இதனை புரிந்துகொள்வான். இதையே ஏட்டு சுரைக்காய் கறிக்குதாவது காண்! என்பர். திருமூலர் ஒரு படி மேலே சென்று பின் வருமாறு உரைகின்றார்...

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்எனில் சொல்லுமாறு எங்கனே.

அனுபவத்தை ஒருவர் விளக்கமுடியாது. அனுபவமே உண்மை புரிதலுக்கு ஏற்புடையதாகும்! அறம் பொருள் இன்பம் மூன்றிக்கும் உரையுண்டாம். வீடுபேறேன்பது அனுபவமாகும்!
Download As PDF

Wednesday, September 2, 2015

ஒன்றாக காண்பதே காட்சி !


ஒன்றாக காண்பதே காட்சி !

பொன் அணிகலன்களாக மாறும்போது அதற்கு பல்வேறு பெயர்களும் பயன்பாடுகளும் உண்டு! இருப்பினும் அவை அனைத்தும் மதிப்பிடும் போது தங்கமே!

ஒரு பக்தர் ஒரு விநாயகர் சிலையையும் ஒரு எலி சிலையும் தலா ஒரு கிலோ எடையில் செய்திருந்தார். கஷ்ட காலத்தில் முதலில் எலி சிலையை விற்றார். பின்னர் விநாயகர் சிலையை விற்க வந்தபோது வியாபாரி அதே தொகையை தந்தார்.

அந்த பக்தருக்கு கோபம் வந்து விட்டது. அந்த வியாபாரியிடம் அவர் என்னய்யா நீர் முதலில் அவர் வாகனத்திற்கு தந்த அதே தொகையையே விநாயகருக்கும் தருகிறாய் ! என கேட்டார்.

அதற்கு வியாபாரி இரண்டும் தலா ஒரு கிலோ எடையே கொண்டிருக்கிறது என விளக்கிறார். இங்கே இருவரின் மனோபாவமும் வெவ்வேறு ! உருவங்கள் வெவ்வேறாக இருப்பினும் அவை மதிப்பிலும் தன எடையிலும் ஒன்றே!

அது போன்று காணும் இந்த உலகவும் காண்பவரும் காட்சியும் ஒன்றே ! ( கனவில் காணும் பொருள்களும் காட்சியும் காண்பவனும் ஒருவனே! அது போன்றே விழிப்புற்ற ஒருவருக்கு இந்த உலகமும் கனவே !)
Download As PDF

ஒன்றாக காண்பதே காட்சி !



ஒன்றாக காண்பதே காட்சி !

ஒரு சமயம் ஜனக மகாராஜன் ஒரு கனவு கண்டான். கனவில் அவன் வறியவனாகவும் நீண்ட நாள் பசியில் வாடுவதாய் கண்டான். தனது பிச்சை பாத்திரத்தை கூட ஏந்தும் வலுவு கூட அவன் கைகளுக்கு இல்லை ! ஒரு மகராசி இட்ட உணவை கைகளிலிருந்து கீழே தவறவிட்டார். அருகில் இருத்த நாய் ஒன்று அந்த உணவில் வாய் வைத்து விட்டது .
இதை கண்ட அவருக்கு ஆற்றொணாத கோபமும் அழுகையும் வந்துவிட்டது ! கதறி அழுதவாறு படுக்கையிலிருந்து கீழே விழுந்தார். திடுக்கிட்டு விழித்தார். தான் ஒரு மன்னனாயும் தன் அருகே அறுசுவை உணவு இருப்பதையும் காண்டார்.

கனவில் அவர் கண்ட காட்சிகளும் காணும் வரை உண்மை என்பதையும் உணர்ந்தார். எது உண்மை? என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது ! வசிஷ்டரிடம் தனது நிலையை விளக்கி ஐயனே! கனவு - நினைவு இதில் எது உண்மை என கேட்டார்.

அதற்கு வசிஷ்டர் ஜனகனே ! எந்நிலையிலும் காண்பவன் ஒருபோதும் மாறுவதில்லை!. காட்சிகளே மாறுகின்றன என்பதை அறிந்துகொள். நீ கண்ட கனவிலும் நினைவிலும் அனுபவிப்பவன் ஒருவனே! அவன் ஒருபோதும் மாறுவதில்லை! அனுபவங்கள் மாத்திரமே மாற்றம் அடைகின்றன,

அனுபவிப்பவனாகிய நீ ஒருபோதும் மாறுவதில்லை! எனவே காண்பது ஒருவனே! அந்த மாற்றம் அடையாத தன்மையில் நீ எப்போதும் நிலைதிருப்பாயாக! என ஆசிர்வதித்தார்.
Download As PDF

ஒன்றாக காண்பதே காட்சி.




ஒன்றாக காண்பதே காட்சி !

ஒரு பொருளை காணும் போது 
அதில் காண்பவன், 
காணப்படும் பொருள் இவ்விரண்டை இணைக்கும் காட்சி 
என மூன்று நிலைகள் உண்டு !

தன்னையும், தனது அறிவையும், அறியப்படும் பொருளையும் பகுத்து உணரும்படி நில்லாமல் அறியப்படும் பொருளில் அழுந்தித் தன்னையும் தனது அறிவையும் மறந்து அப்பொருளோடு ஒன்றுபட்டு நிற்கும்போதே இன்ப நுகர்ச்சி உளதாகும். இவ்வுண்மை உலக இன்பத்திற்கும் பொருந்தும்; பேரின்ப நுகர்ச்சிக்கும் பொருந்தும்.

கனவில் பெண்ணிடம் இன்பம் துய்க்கும் நிலையில் இங்கே காண்பவனும் - காட்சியும் - காணப்படும் பொருள் அனைத்தும் (அவனே ) ஒன்றே!
Download As PDF

Saturday, August 22, 2015

சென்னப் பட்டினத்தின் தொன்மை வரலாறு.

சென்னப் பட்டினத்தின் தொன்மை வரலாறு !

கடலும் கரையும் சார்ந்த பகுதிக்கு பட்டினம் என்று பெயர். சென்னப்  பட்டினம் என்பதற்கு நல்ல பட்டினம் என்று பொருள்.வேர் சொல் சென்ன கேசவ பெருமாள் என்ற ஆலயம் வழி வந்ததாக இருக்கலாம்! ( சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ).

2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு நாதரின் பன்னிரு  சீடர்களில் ஒருவரான தோமையர் ( Saint Thomas ) கோழிகோடு வழியே வந்து பின்னர் சென்னையில் போதித்த வரலாறு உள்ளது. ( அன்னாரின் அடக்க ஸ்தலம் Saint Thomas Mount யில் உள்ளது  ). சமகாலத்திய திருவள்ளுவரின் தோற்ற ஸ்தலமான மைலாப்பூர் உள்ளது. மேலும் திருவள்ளுவரின் பழைய ஆலயம் ஒன்று இங்கு உள்ளது.


பூம்பாவை என்பவர் எழாம் நூற்றாண்டில் மயிலாப்பூரில் வாழ்ந்த பெண்ணாவார். இவர் பாம்பு தீண்டி இறந்து போக, இவரது சாம்பலிலிருந்து திருஞானசம்பந்தர் பதிகம் பாடி உயிர்ப்பித்தார். பூம்பாவை சந்நிதி மயிலாப்பூர் கபாலிசுவரர் சிவாலயத்தில் அமைந்துள்ளது. நெய்தல் நிலம் என்பது  ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன.ஐந்திணைக் கருப்பொருளைக் கூற வந்த இறையனாரின் அகப்பொருள் நூல் ' நெய்தல் திணைக்கு மரம் புன்னையும், ஞாலழும் கண்டலும் " என்று குறிப்பிடுகிறது. கபாலீச்சரம் ஸ்தல விருட்சம் புன்னை மரமாகும்.


இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.
(~ தகவல் விக்கிபீடியா.)


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் நூறு வெண்பாக்களை கொண்டுள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் பேயாழ்வார்.  இவரின் தோற்ற ஸ்தலம் மைலாப்பூர் .



பட்டினத்து அடிகள் வழிபட்ட திருஒற்றியூர் கோயில் மிக தொன்மையானது. இவரது காலம் கி.பி. 10 - ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகும்.

திரு அல்லி கேணி பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்று. இக்கோயில் முதலில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது.



காரைக்காலம்மையார் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். இசைத் தமிழால் பாடியவர்களில் இவரே முதலாமவர். ஒரு பாடலின் இறுதி வார்த்தையை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாகப் பயன்படுத்தி எழுதும் அந்தாதி முறையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியவரும் இவரே. இவரின் அடக்க ஸ்தலம் திருவலங்காட்டில் உள்ளது.



திருமுல்லை வாயில் திருக்கோயிலில் சோழமன்னர்களில், பரகேசரிவர்மன் உத்தமசோழன், முதலாம் இராசேந்திர சோழன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன் இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பாண்டியதேவன் காலத்திலும்; விசயநகர வேந்தர்களில் ஹரிஹரராயர் II, இரண்டாம் தேவராயருடைய தம்பி பிரதாப தேவராயர், வீரப்பிரதாபபுக்க ராயர், வீரப்பிரதாப மல்லிகார்ச்சுன தேவமகாராயர் இவர்கள் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளன்றி, பார்த்திவேந்திரவர்மன் காலத்திலும் பொறிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுக்கள் உண்டு.

மழவரையர் மகளாரும், கண்டராதித்த பெருமாள் தேவி யாரும், ஆகிய செம்பியன்மாதேவியார், புழற்கோட்டத்து அம்பத்தூர் நாட்டு அம்பத்தூர் ஊராரிடமிருந்து நிலம் வாங்கி, இத் திருமுல்லை வாயில் கோயிலுக்கு உத்தமசோழ தேவரின் பதினான்காம் ஆட்சி யாண்டில் கொடுத்துள்ளனர். மண்டபத்துத் தூணில் உள்ள முதலாம் இராசேந்திரசோழ தேவன் கல்வெட்டு, அந்த மண்டபம் கட்டப் பட்டதைக் குறிப்பிடுகின்றது.

இது போன்றே வியாசர்பாடி திருவான்மியூர் கோயம்பேடு போன்ற இடங்களின் செய்திகள் மிகவும் தொன்மையானது. பல்லவர்கள் கால சிற்பங்களும் கடல் கொண்ட ராயபுரம் விஸ்வநாதர் ஆலயமும் காலத்தை பறை சாற்றுபவை. பற்பல கடற்கோள்களால் ( சுனாமி ) இதன் வரலாறு கிடைக்கவில்லை. இதன் பாதிப்பை உணர்ந்த மன்னர்கள் தங்களின் தலைநகர்களை  இக்கரைகளை தவிர்த்தே அமைத்தனர்.

நெய்தல் நிலத்தை சார்ந்த மீனவ குடிகளே இதன் ஆதி மக்கள்! 
Download As PDF

அழுகை என்பது அவமானமல்ல!



















அழுகை என்பது அவமானமல்ல...
வெளிகாட்ட முடியாத உணர்வுகளின் உண்மை வெளிப்பாடு அது.
உங்கள் கண்ணீர் துளிகளை ஒருபோதும் மறைக்காதீர்கள் ! அவை சிந்தட்டும்.... 
மேலும் அவை நீங்கள் இயல்பாக மிக எதார்த்தமாக இருப்பதற்கான அடையாளம் !


Download As PDF

அன்பின் உண்மை !

அன்பின் உண்மை !

மலரின் அழகு உங்களை கவர்த்தால் அதை பறித்து விடாதீர் ! 
மாறாக அதனை செடியிலேயே விட்டுவிடுங்கள் ! 
ஒருவேளை அதன் மீது உங்களுக்கு அன்பிருந்தால் ....

ஏனெனில் பறித்தவுடன் அது வாடிவிடும் ! செடியிலில் இருந்தால் இன்னும் சில நாட்களுக்கு அதன் ஜீவிதம் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும்!

உண்மையான அன்பு என்பது எதையும் தனதாக்கிக் கொள்வதல்ல! உண்மையான அன்பு என்பது எதையும் போற்றி பாதுகாப்பதே !

~ அன்பன் ஓஷோ.
Download As PDF