Saturday, May 21, 2011

பெயரை தாங்கி நின்றது எது?



ஒவ்வொரு பொருளுக்கும் அதை அடையாளப்படுத்தி 
அறிவதற்கே பெயரிடப்படுகிறது.அனைத்தையும் 
வகைப்படுத்தி பெயரிட்டவன் மனிதனே.

புல்லினம் முதற்கொண்டு தெய்வீகம் வரை வகைப்படுத்தப் 
பட்டு பெயரிடப்பட்டிருகிறது.

பிரசவம் (பிர+சவம்) சவமாகிய இந்த உடலுடன் பிரவேசிக்கும் 
மனித உயிருக்கும் பதினாறு நாள்கள் கழித்தே 
நாமகரணம் சூட்டும் வழக்கம் நம் மரபில் உண்டு. 

நமது கலாசாரத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவனின் 
திருநாமத்தையே பெயராக வைக்கின்றனர்.ஏனெனில் அவனுள் 
அந்த தெய்வீக அம்சம் இருப்பதாலேயே.இதனை ஒருவன் 
வாழும் காலத்திலேயே  அறிந்து அந்த அமரத்துவத்துடன் 
ஒன்றவேண்டும் என்பதற்கே.

ஞானசம்பந்தன் என்பது ஒருவன் அறிவுடன் சம்பந்தம் 
உடையவன் என்பதற்கே அந்த பெயர்.மாறாக அவன் இந்த 
அறிவற்ற (அஞ்ஞான) உடலே தான் என்னும் எண்ணம் கொண்டு 
உடலுடன் சம்பந்தமுடையாவனாகவே தன்வாழ்நாள் 
முழுவதும்  உள்ளான்.

உயிரற்ற உடல் ஒரு அறிவற்ற சடப்பொருளே.
இந்த அறிவற்ற சடத்துடன் தொடர்புள்ளவன் அறிவற்றவனே!

அறிவற்ற இந்த உடலை இயக்கும் அறிவுடை பொருளாகிய 
உயிரை (திருவாகிய இறை அம்சத்தை) அறியாதவனாய் 
இருக்கிறான்.(நாள்முழுவதும் மூச்சு விட்டும் அதை உணராது 
இருப்பதுபோல் பிரக்ஞை அற்று உள்ளான்.)

இந்த உயிரோட்டமான உணர்வே!அறிவே! தான் என்பதை அறிந்தால் 
அழியும் உடலுடன் தன்னை பிணைக்காமல்,அழிவற்ற பதமாகிய 
அறிவாய் தான் விளங்குவான்.

ஒருவன் இறந்து விட்டால் அவனது பெயர் கெட்டு மீண்டும் 
இந்த உடல் சவம்(பிணம்) என்றே அழைக்கப்படுகிறது.

இதுவரை அந்த பெயரை தாங்கி நின்றது எது? என்று 
யூகித்து அறிந்து கொள்ளவும். 
   
   
Download As PDF

Thursday, May 19, 2011

மனிதன் தன் எண்ணங்களாலேயே வாழ்கிறான்.



ஒரு வயதான் மனிதர் தன் மரணப் படுக்கையில் முதலில் 
கடவுளைத் தொழ ஆரம்பித்தார். அவர் பெயரை அடக்கடி சொன்னார்.
பிறகு திடீரென்று மாற்றி சாத்தானின் பெயரைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவ்ருடைய குடும்பத்தினர் இது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

" என்ன உங்களுக்கு பைத்தியம் ஏதும் பிடித்துவிட்டதா? 

வாழ்வின் கடைசி நேரத்தில் நீங்கள் சாத்தானின் பெயரை 
சொல்லுகிறீர்களே?" என்றார்கள்.

"நான் எந்தவித அபாயத்தையும் இதற்கு பிறகு சந்திக்க விரும்பவில்லை . 

நான் இறந்த பிறகு எங்கே செல்வேன் , யாரைச் சந்திப்ப்பேன் என்பது 
யாருக்கு தெரியும் ? சாத்தானின் பெயரை சொல்லுவதால் எனக்கு ஒன்றும் 
கஷ்டம் ஏற்படப் போவதில்லை.

இருவரில் யாரைச் சந்தித்தாலும் அவர்களின் பெயர்களை உச்சரித்ததால், 

அவர்கள் எனக்கு நன்மை செய்யக்கூடும். அப்படி இருவரையும் சந்திக்க 
இயலவில்லை என்றாலும் ஒன்றும் கஷ்டமில்லை. அப்படி இருவரையும் 
ஒன்று சேர சந்திக்க நேர்ந்த்தாலும் கவலை இல்லை .நான் எல்லா சாத்தியக் 
கூறுகளையும் எண்ணித்தான் இப்பொழுது செயல்படுகிறேன்!". என்றார்

ஓஷோ கூறுகிறார் :
" கடவுள் மற்றும் சாத்தான், நன்மை, தீமை என்ற இரண்டு வேறுபாடுகளால் மனிதன் நசுக்கப்படுகிறான். இப்படி மனிதன் நசுக்கப்படாமலும் அடிமையாக இருக்காமலும் தன் சுதந்திரத்துடன் இருப்பதையே நான் விரும்புகிறேன் ."
Download As PDF

ஒப்பிடுவது சாத்தியமில்லை.



பேராசை கொள்ளும்படி நீங்கள் கற்பிக்கப்பட்டிருக்கிரீர்கள்.
அது ஒருபோதும் எந்த இன்பத்தையும் தராது.
அது வன்முறையானது.அழிவு பயப்பது.

புத்திசாலி மனிதன் பேராசை கொள்வதில்லை.
மற்றவர்களுடன் போட்டி போடும் விருப்பமின்றி
அவர் சாதாரணமாக வாழ்கிறார்.

ஒவ்வொருவருக்கும் தனிச் சிறப்பு உண்டு என்பதை
அவர் அறிவார்.அவர் ஒரு போதும் பிறருடன் ஒப்பிடுவதேயில்லை.
ஒருபோதும் தன்னை மேல் என்றோ ,கீழ் என்றோ அவர் எண்ணுவதில்லை.



அவர் ஒருபோதும் உயர்வு மனப்பான்மையாலோ,
தாழ்வு மனப்பான்மையாலோ துன்புறுவதில்லை.

ரோஜாவை தாமரையுடன் எப்படிஒப்பிட முடியும்?
எல்லா ஒப்பீடுகளின் துவக்குமுமே தவறாக உள்ளன.
ஒவ்வொரு தனி நபரும் தனக்கே உரிய தனியழகு கொண்டிருக்கிறார்.

இவற்றை ஒப்பிடுவது சாத்தியமில்லை.

அப்படியானால் பேராசை கொள்வதன் பொருள் என்ன?
உன்னை விட நானே உயர்வாக இருக்க வேண்டும் என்பதே 

பேராசையின் பொருள்.

மற்றவர்களை விட நான் உசத்தி என்பதை நான் நிரூபித்தாக வேண்டும்.

இதற்காக நீ ஏன் புத்தியை இழக்க வேண்டும்?
Download As PDF

அறிவு என்னும் கதவு திறந்திருந்தால்...



சுபி ஞானி ஒருவரிடம் ஒரு விவசாயி வந்தான்.

''ஐயா.என் மனைவி வீடு முழுவதும் ஆடு,மாடு,கோழி
என்று வளர்க்கிறாள்.அதனால் வீட்டிற்குள் நுழைந்தாலே 

ஒரே துர்நாற்றமாக இருக்கிறது.இதற்கு நீங்கள்தான் ஒரு வழி 
சொல்ல வேண்டும்.''என்று அவன் ஞானியிடம் சொன்னான்.

அவன் வீட்டைக் கவனித்த அந்த ஞானி சொன்னார்,

''உன் வீட்டில் தான் ஜன்னல்கள் இருக்கின்றனவே?
அவற்றை ஏன் மூடி வைத்திருக்கிறாய்?ஜன்னலைத் திறந்து 
விட்டால் காற்று நன்றாக வரும்.துர்நாற்றமும் போய்விடும்.

''உடனே விவசாயி பதற்றத்துடன் ,''ஐயையோ,ஜன்னலைத் திறந்து 

விட்டால் என் புறாக்கள் எல்லாம் பறந்து போய்விடுமே?''என்றான்.
அதிக முக்கியத்துவம் இல்லாத புறாக்களுக்காக ஜன்னலைத் 

திறக்காமல் துர் நாற்றத்தை அவன் சகித்துக் கொள்கிறான்.

அதே போல நாமும் முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை 

எண்ணிக்கொண்டே நமது அறிவு என்னும் ஜன்னலை திறவாதிருக்கிறோம்.

திறந்திருந்தால் அறியாமை வெளியேறியிருக்கும்.

அன்பால் உங்கள் உள்ளம் நிறைந்திருக்கும்.
Download As PDF

பணிவு என்பது புரிதலில் தான் உள்ளது.



அசோக சக்கரவர்த்தி தன் ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது 
எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் 
தன் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார்.

அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர்
ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது.

அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார்.

மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல்,

ஒரு ஆட்டுத்தலை,ஒரு புலித்தலை,ஒரு மனிதத்தலை மூன்றும்
உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார்.
மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன.

மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார்.
ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புலித்தலையை
வாங்கப் பலரும் யோசித்தனர்.இறுதியில் ஒரு வேட்டைக்காரர்
தன் வீட்டு சுவற்றில் பாடம் பண்ணி தொங்கவிட வாங்கிச் சென்றார்.

ஆனால் மனிதத் தலையைக் கண்டு அனைவரும் அஞ்சிப்
பின் வாங்கினர்.முகம் சுழித்து ஓடினர்.ஒரு காசுக்குக் கூட
யாரும் வாங்க முன்வரவில்லை.

விபரங்களை மன்னரிடம் சொன்னபோது மனிதத் தலையை 

யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார்.
இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை.

இப்போது மன்னர் சொன்னார்,''தளபதியே,

மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது.
இருந்தும் இந்த உடல் உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறது? 

இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்கு தெரிகிறது.

உடலில் உயிர் இருக்கும்போதே,தம்மிடம் எதுவும் இல்லை 
என்று உணர்ந்தவர்கள் ஞானிகள்.

அத்தகைய ஞானிகளை பாதத்தில் விழுந்து வணங்குவதில்
என்ன தவறு இருக்க முடியும்?''

தளபதிக்கு இப்போது புரிந்தது.
பணிவு என்பது புரிதலில் தான் உள்ளது என்பது.
Download As PDF

உனக்குள்ளே இருக்கிறது.



பாலைவனத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு 
காலையில் சென்று தூரத்தில் உள்ள ஒரு மலையை பார்த்து 
கொண்டு நின்றால் கீழே விழும் அவனது நிழலுக்கு அடியில் ஒரு 
பெரிய பொக்கிஷம் உள்ளது, என்று ஒருவன் கேள்விப்பட்டான்.

உடனே அவன் காலையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தான்.
மணலின் மீது அவனது நிழல் நீண்டு மெல்லியதாக விழுந்தது.
பொக்கிஷத்தை பெற அவன் மணலை தோண்ட ஆரம்பித்தான்.

அவன் தோண்ட தோண்ட சூரியன் மேலெழுந்து கொண்டிருந்தது.
அவனது நிழல் சுருங்கி கொண்டே இருந்தது,அவன் தோண்டி 

கொண்டே இருந்தான்.நண்பகலில் அவன் நிழல் அவன் 
காலடிக்குள் நுழைந்து கொண்டது.

நிழலே இல்லை.
அவன் ஏமாற்றத்தால் அழுது புலம்பினான்.
அப்போது அவ்வழியே வந்த ஒரு பெரியவர் அவனது செயல் 

கண்டு சிரித்தார்.அவன் அவரை பார்த்தான்.அவர் கூறினார்:

இப்போதுதான் உன் நிழல் பொக்கிஷம்
இருக்கும் சரியான இடத்தை காண்பிக்கிறது.

அது உனக்குள்ளே இருக்கிறது என்றார்.
Download As PDF

Tuesday, May 17, 2011

மனதை இழக்க வேண்டும்.



பூஜை,மந்திரங்கள்,மதச்சடங்குகள்,
உருவ,அருவ வழிபாடுகள் மூலமாக,இந்த உலகத்தில்
பல பொருள்களை விசேஷமாக நீங்கள் அடையலாம்.

ஆனால் கடவுள் தன்மையை ஒருக்காலும் அடைய முடியாது.
அந்த மைய பேரின்ப நிலையை,சலிப்பற்ற ஆனந்த நிலையை 
அடைய மனதை ஒருவன் இழக்க வேண்டும்.

இதற்கு மிகுந்த தைரியம் வேண்டும்.உழைப்பு வேண்டும்.
ஆகவேதான் பெரும்பாலோர் ,"சீச்சீ இந்த பழம் புளிக்கும்" 
என்று ஒரு கட்டதில் பயந்து திரும்பவும் உலகத்திற்கே 
ஓடிவந்து விடுகின்றனர்.

என்ன செய்வது?
அந்த தைரியத்தை அவர்கள்தான் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
அதற்கு சுயசிந்தனை அவசியம்.
Download As PDF

ஆசை படுவது யார்?



ஆசை படுவது யார்?

என்று நீங்கள் அமைதியாக உட்கார்ந்து சிந்தியுங்கள்.

உங்கள் உடலா?,உங்கள் மனமா?
நிச்சயம் உடலாக இருக்க முடியாது.
ஏனெனில் அது மனம் வழியே செயல்படுகிறது.

பிறகு மனமா?ஆமாம்.
இப்பொழுது அப்படியே இருக்கட்டும்.

மனம் எப்படி செயல்படுகிறது?
உங்கள் இறந்தகால,வருங்கால எண்ணங்களினால்,
அறிந்ததை அடைய ஆவல் கொண்டு உங்களை 
அலைய வைக்கிறது.

"இதோ இன்பம்,அதோ இன்பம்" என்று உங்களை 
விரட்டிக் கொண்டே இருக்கிறது.


ஆனால் ஒன்றை அடைந்தால்,அதில் சலிப்புற்று,
வேறு ஒன்றிற்கு ஏன் ஆசைபடுகிறீர்கள்? என்று
என்றைக்காவது ஆழ்ந்து சிந்தித்து இருக்கிறீர்களா?

இந்த உடலுக்கும் மனதிற்கும் எது ஆதாரம்,
ஏன் மனம் அலை பாய்ந்துக்கொண்டிருக்கிறது 
என்று தனிமையாக சிந்தித்து இருக்கிறீர்களா?

அப்படி ஒருவர் சிந்திக்கத் தொடங்கினால்,
உண்மையில் "தான் யார்" என்று விளங்க ஆரம்பிக்கும்.

அது உங்கள் "உயிர்தன்மையைத் தவிர
வேறு எதுவும் இல்லை.

அது தன் உணர்வாய்,தன் அறிவாய்,
தன்னையே தேடுகிறது.

ஆனால் அதுவே மனமாகி,படர்க்கை நிலை அடைந்து,
அந்த "தேடுதலை" சாதாரண மக்களிடம்
இந்த உலகத்தில் தேட வைக்கிறது.

தன்னை தானே தேடுவது உண்மைநிலை.
உலகத்தில் தேடுவது பொய்மைநிலை.

இந்த வித்தியாசத்தை ஒருவன் நன்றாக புரிந்துக் கொள்ளவேண்டும்.  

Download As PDF