Thursday, April 7, 2011

புறம்போக்கு.



காட்சிக்கு ஆதாரமாய் விளங்குவது கண்.(பொறி)
கண்ணிற்கு ஆதாரமாய் விளங்குவது பார்வை.(புலன்)
பார்வையை கொண்டு அறிவது மனம்.(அந்தக்கரணம்)
இவை புறம்போக்கானவை.(வெளிபோக்குடையவை )
இவற்றை பின்பற்றி செல்பவனும் புறம்போக்கானவன்.



பொறி,புலன்,மனம் இவற்றை கொண்டு இவற்றின் உற்பத்தி
ஸ்தானத்தை(இடத்தை)அறிய இயலாது.மனம்(எண்ணம்)
தான் தோன்றும் இடத்தை அறிய முற்படும்போது அதை(எண்ணத்தை) 

கடந்த நிலையில் அனைத்திற்கும் ஆதாரமான உண்மை அறியப்படும்.

"மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால்
ஈசனைக் காட்டும் உடம்பு"

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே - சிவபுராணம்

உரை மனங் கடந்த வொருபெருவெளிமேல்
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ்ஜோதி -- திருவருட்பா அகவல்

நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு. ஔவையார்.
Download As PDF

No comments: