Tuesday, April 5, 2011

நீயும் அது ஆவாய்.



குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டை இட்டுக் 
குளத்துநீர்க் குள்ளிருந்து குறிப்புடன் நினைக்கும் போது
குளத்திலே புதைத்த முட்டை கருவுரு வானாற் போலுன் 
உளத்துலே நாகை நாதர் உருவறிந் துணர்வாய் நெஞ்சே!
                                                                        நெஞ்சறி விளக்கம்

ஆமைகள் தங்களது முட்டைகளை கரையில் இட்டுவிட்டு மணலில்  
புதைத்து விட்டு மீண்டும் தங்களின் நீர்நிலைக்கே திரும்பிவிடும்.

அவை நீர்நிலையில் இருந்தவாறே தங்கள் இட்ட
முட்டையை சிந்திக்கும்.அவைகளின் எண்ணத்தாலேயே
அவைகள்பொரிந்துவிடும்.(முட்டை இட்ட ஆமை இறந்துவிட்டால்
முட்டைகள் பொரியாது.இது பலரால் பலமுறை முயற்சிக்கபட்ட
உண்மை.)

அதுபோல உங்களின் உள்ளத்துள்ளே அறிவுருவாய் உள்ளதை 
உணர்ந்தால் நீயும் நினைவால் அதுவாவாய் என்பது பொருள்.   

Download As PDF

No comments: