Monday, October 24, 2011

உபநிஷதங்கள் வற்புறுத்துவது மேன்மையை அல்ல. முழுமையையே!




உபநிஷதங்கள் வற்புறுத்துவது மேன்மையை அல்ல.
முழுமையையே என்பதை நினைவிற் கொள்க.
பூரணத்தையே உபநிஷதங்கள் வற்புறுத்துகின்றன.
உபநிஷதங்கள் வாழ்க்கைக்கு எதிரானவை அல்ல.


அவை வாழ்க்கையை துறக்கச் சொல்லவில்லை என்பது 
முதல் விஷயம்.அவற்றின் அணுகுமுறை முழுமையானது.
வாழ்க்கை முழுமையாக வாழ்வதற்கானது.


அவை தப்பித்துக்கொள்வதை உபதேசிக்கவில்லை.
நீங்கள் இந்த உலகியலேயே வாழ்வதை,உலகியலில் 
மேலோங்கி நிற்பதை,ஆனாலும் உலகியலில் ஆழ்ந்து 
விடாமல் உலகியலில் வாழ்வதை அவை விரும்புகின்றன.


வாழ்க்கையை துறக்க வேண்டுமென்றோ,
வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றோ,
வாழ்க்கை அழகற்றது ,பாவமானது என்றோ அவை 
உங்களுக்கு உபதேசிக்கவில்லை.


அவை வாழ்க்கையில் மகிழ்ச்சி கொள்கின்றன.
அது இறைவனின் கொடை.
அது கடவுளின் உருவ வெளிப்பாடு. 

Download As PDF