Saturday, November 26, 2011

உலகம் அன்புமயமானது!



அன்பும்,கருணையும் மனிதனின் இயற்கை குணங்கள்.

அது ஒருவர் மீது மட்டும் வெளிப்படும்போது
(ஒருமுகப்படும் போது) காதலாகிறது.

அது தன்னை சார்ந்தவர்கள் மீது வெளிப்படும்போது பாசமாகிறது.

அது சமூகத்தின் மீது வெளிப்படும்போது இனம்,மொழி,கலை,
காலாசாரப் பற்றுடையதாகிறது.

அதுவே சற்று விரிவடைய சமுதாய அக்கறையாக வெளிப்படுகிறது.
அநீதியை காணும்போது கோபமாகவும்,ஆதங்கமாகவும்,
அனுதாபமாகவும்,நையாண்டியாகவும் வெளிப்படுகிறது.

அதன் உண்மை சொரூப்பதை தன்னுள் உணரும்போது
அதுவே அனைத்துள்ளும் நிறைந்துள்ளது.
எங்கும் அதன் எல்லையற்ற தன்மையை உணரலாம்.


ஆக உலகம் அன்புமயமானது! இறைவனும் கூட அதுவே!
Download As PDF

Thursday, November 24, 2011

கடலில் வாழ்தாலும் நீரை தேடும் மீன்கள் நாங்கள்!

பொருளிலெல்லாம் மிகப்பெரிய பொருள் இறைவன்.
ஆனால் அது யாருக்கும் புலப்படுவதில்லை.
பெருங்கூச்சலிட்டு அழைப்பவன் இறைவன்.
ஆனால் அவன் அழைப்பை யாரும் கேட்பதில்லை.

மிக அருகில் இருப்பவன் இறைவன்.
ஆனால் யாரும் அவனை உணர்வதில்லை.
எல்லோர்க்கும் அவன் தன்னை பங்கிட்டுக் கொடுத்திருக்கிறான்.
ஆனால் அவன் பெயர் யாருக்கும் தெரிவதில்லை. 

உண்மைதான்....
சுவாசித்துக் கொண்டிருந்தாலும் விடும் மூச்சை மறந்தவர்கள் 
நாங்கள்!சூரியனின் பிரகாசத்தில் உலவினாலும் அவனை பற்றிய 
எந்த சுவாதினமும் இல்லை எங்களுக்கு!
கடலில் வாழ்தாலும் நீரை தேடும் மீன்கள் நாங்கள்!

உடன் இருந்தாலும் மறப்போம்,
முடிந்தால் மறுப்போம் அவன் இல்லையென்று!
Download As PDF