Thursday, June 9, 2011

உடம்புனுள் உத்தமனைக் காண்.


நமது உடலின் அமைப்பை நன்கு கூர்ந்து கவனித்தால் அது இந்த உலகை
மிக நேர்த்தியாக தொடர்பு கொள்ள வடிவமைக்கபட்டுள்ளதை காணலாம்.
இந்த உடலை கொண்டே  இவ்வுலகத் தொடர்பு.

"உயிருக்கு உறுகண் செய்யாமை" என்பது பிற 
உயிருக்கு செய்வதுமட்டுமன்றி தன் உயிர்க்கும் உறுகண் 
செய்யாதிருத்தல் வேண்டும்.

நாக்கு செத்துவிட்டது என்றால் நாக்கின் உயிராகிய சுவை குன்றிவிட்டது என்று பொருள்.அதுபோல் கண்.காது,மூக்கு,சரீரம்,நாக்கு மற்றும் மனதிற்கு அதனதன் உயிராகிய பார்வை,கேள்வி,மணம்,தொடுஉணர்வு மற்றும் 
எண்ணம் ஆகியவையே ஆருயிர் என்றழைக்கப்படுகிறது.

Download As PDF

Wednesday, June 8, 2011

இறைவன் இருக்கிறானா?




ஒரு பெரியவர் தனிமையான இடத்தில் அமர்ந்து இறைவனை தியானித்துக் 
கொண்டிருந்தார்.அவரைக் கண்ட ஒரு இளைஞன் அவரருகே சென்றான்.
ஐயா தங்கள் என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்?என்பதை 
நான் அறிந்துகொள்ளலாமா?என்று கேட்டான்.

அதற்கு அவர்,இளைஞனே!!
"அனைத்திற்கும் ஆதாரமாய் விளங்கும் இறைவனுடன் இரண்டற 
கலக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன்"என்றார்.
உடனே அவன், 
Download As PDF