Thursday, August 4, 2011

பொய்வேஷம்

ஜாதி,சேர்க்கை,குலம்,கோத்திரம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டதும்,
பெயர்,வடிவம்,குணம்,குற்றம் ஆகியவை அற்றதும்,
இடம்,காலம்,,பொருள் முதலியவற்றைக் கடந்ததும் ஆகிய
பிரம்மம் எதுவோ அதுவே "நான்" என்று புத்தியில் ஒருவன் 

இடைவிடாது சிந்தித்தல் வேண்டும்.


உலகைப் பின்பற்றிச் செல்வதைதையும்,நூல்களைப் பின்பற்றிச்
செல்வதையும்கூட விட்டொழித்து ஆத்மாவில் பொய்யாக
கற்பிக்கப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் ஒழிக்கவேண்டும்.



உறக்கத்தாலும் உலக வியாபாரத்தாலும்,ஐம்புலன்களின் விஷய அனுபவத்தாலும் ஏற்படும் ஆத்மா மறதிக்கு சிறிதும் அவகாசம் கொடுக்காமல் உண்மையான 
தனது ஆத்மா சொருபத்தை இடைவிடாது சிந்தித்து தன்மேல் ஏற்றிக்கொண்ட வேஷத்தை நடிகன் களைவதுபோல்பொய்யுடலைத்
தான் என்று எண்ணுவதை விட்டுவிடவேண்டும்.
Download As PDF

Monday, August 1, 2011

முதல் கடமை


அன்பு,கருணை,கடமை,சேவை,சமூகம் என்ற பெயரால் 
உங்களை நீங்களே பலியாக்கி கொள்ளவேண்டாம்.
இவை அனைத்தும் அறியாமையால் உங்களின் அகங்காரம் வளர்வதற்கும்,மென்மேலும் கடினமாவதற்கும் மட்டுமே உதவும்.

உங்களின் முதல் கடமை உங்களின் இருப்புதன்மையை 
உணர்வதே என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.


Download As PDF