Friday, October 4, 2013

தெரியாததைப் பேச வேண்டாம்!



புத்தர் வாழ்ந்த காலத்தில் சாரிபுத்தர் என்ற துறவி இருந்தார். 

ஒருமுறை புத்தரைக் காண வந்த சாரிபுத்தர், உங்களைப் போல ஒரு புத்தரை இதுவரை நான் கண்டதில்லை. உங்களைப் போல அறிவிலும் ஞானத்திலும் சிறந்தவர் வேறொருவர் உலகில் இல்லை.'' என்று புகழ்ந்தார்.

புத்தரும் அவரிடம், ""அருமையாகச் சொன்னீர். இதற்கு முன் வாழ்ந்த புத்தர்களைப் பற்றியும், அவர்கள் வாழ்ந்த விதம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்,'' என்று கேட்டார். மறுமொழி ஏதும்பேச முடியாமல் சாரிபுத்தர் தயங்கி நின்றார்.


 ""அது சரி! பரவாயில்லை! என்னைப் பற்றியாவது சொல்லுங்களேன். நான் எப்படி வாழ்கிறேன் என்றாவது சொல்லுங்கள்?'' என்றார். அதற்கும் சாரிபுத்தர் அமைதி காத்தார்.

அப்போது புத்தர் தெரிந்ததைப் பற்றி பேசுவதும், தெரியாத விஷயத்தில் மவுனம் காப்பதும் தான் சிறந்தது. அறிவிலும் ஞானத்திலும் சிறந்த சாரிபுத்தரும் புத்தரின் அறிவுரையை ஒரு நண்பரைப் போல ஏற்றார்.
Download As PDF

உனக்கும் அது சாத்தியமே!



நீயும் என்னை போன்றவன்.
நான் புத்தனாக முடியும் எனில் உனக்கும் அது சாத்தியமே! 
நீ கவலைப்பட தேவை இல்லை. ஞானத்தை பெறுவதென்பது ஒரு சிலருக்கு மட்டும் விதிக்கப்பட்டதல்ல! அது உன்னுடைய பிறப்புரிமை.
Download As PDF

இயல்பானதை கற்றுக்கொள்ள வேண்டியதில்லை!



இயல்பானது எல்லாம் இயற்கை! 
இயல்பற்றது செயற்கை! 
இயல்பானதெல்லாம் இறைவனிடமிருந்து வந்தது.
செயற்கையானவை மனிதனிடம் இருந்து வருவது.
நீங்கள் இயல்பானதை கற்றுக்கொள்ள வேண்டியதில்லை! 
இயல்பற்றதை கற்றுக் கொள்ளாதிருந்தால் போதும்!
Download As PDF

நீங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்!



நீங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்!

உங்கள் வாழ்க்கை என்ற புத்தகம்தான்! 
அதை கற்று தெளிவதே உண்மையான அனுபவம் மற்றும் அறிவு.நீங்கள் வேதங்களையும் உபநிடதங்களையும் விட்டு தள்ளுங்கள். அவற்றை பற்றிய கவலை வேண்டாம்! வாழ்க்கையில் புகுந்து பாருங்கள் அதுவே உண்மையான வேதம்!
Download As PDF

"நான்" இல்லாது போகட்டும்!



அனுபவிப்பனாகிய "நான்" இல்லாது போகட்டும்!

புத்தர் உடைமைகளை விடுங்கள் என்று சொல்லவில்லை. உடைமையாளரை விடுங்கள் போதும் என்கிறார். காரணம் ஒன்றை விட்டால் இன்னொன்றை பெற உடைமையாளனால் முடியும்! எல்லா துன்பங்களுக்கும் இந்த அகந்தையே (நான்) காரணம் எனவே அகந்தையை விட்டு வாழ! என்கிறார். எனவே பொருள்கள் இருக்கட்டும். பொருள்களை அனுபவிப்பவன் இல்லை என்றாகட்டும்!

ஆராயும் இடத்து நான் இல்லாது போகும் என்பதை உன் அனுபவத்தில் ஆராய்ந்து உணர்ந்து கொள்! இது என் அனுபவம்! 


~புத்தர்.
Download As PDF

குறிக்கோள் என்றும் எதுவும் கிடையாது!


குறிக்கோள் என்றும் எதுவும் கிடையாது! 

குறிக்கோள் என்பது கற்பனையானது. கற்பித்துக் கொள்வது. நாம்தான் அதனை உருவாக்குகிறோம். ஆனால் அதுவோ துயரத்தையும் அச்சத்தையும் மன இறுக்கத்தையும் நமக்கு ஏற்படுத்தி விடுகிறது. குறிக்கோளை நோக்கி செல்பவர் பண்பாளர் என்றும், குறிக்கோள் அற்றவர் அர்த்தமற்றவர் என்றும் தீர்மானிக்கின்றோம்!

குறிக்கோளை விடுங்கள். புண்ணியாத்மாக்கள் .பாவாத்மாக்கள் என்கிற பேதம் ஒழியும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற வேற்றுமை மறையும். மதிப்பீடுகளை தூக்கி எறியுங்கள். சொர்க்கம்,நரகம் என்று ஏதும் இருக்காது.

போகிற இடமென்று ஏதும் இல்லை. போகிறவர் யாரும் இல்லை! குறிக்கோள் என்பது எதிர்காலம் பற்றியது. எதிர்காலத்தின் மீது நமக்கு எப்போதும் ஆர்வம். அந்த ஆர்வத்தில் நிகழ்காலத்தை இழந்து விடுகிறோம்!      

~ கௌதம புத்தர் 
Download As PDF