Friday, October 4, 2013

குறிக்கோள் என்றும் எதுவும் கிடையாது!


குறிக்கோள் என்றும் எதுவும் கிடையாது! 

குறிக்கோள் என்பது கற்பனையானது. கற்பித்துக் கொள்வது. நாம்தான் அதனை உருவாக்குகிறோம். ஆனால் அதுவோ துயரத்தையும் அச்சத்தையும் மன இறுக்கத்தையும் நமக்கு ஏற்படுத்தி விடுகிறது. குறிக்கோளை நோக்கி செல்பவர் பண்பாளர் என்றும், குறிக்கோள் அற்றவர் அர்த்தமற்றவர் என்றும் தீர்மானிக்கின்றோம்!

குறிக்கோளை விடுங்கள். புண்ணியாத்மாக்கள் .பாவாத்மாக்கள் என்கிற பேதம் ஒழியும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற வேற்றுமை மறையும். மதிப்பீடுகளை தூக்கி எறியுங்கள். சொர்க்கம்,நரகம் என்று ஏதும் இருக்காது.

போகிற இடமென்று ஏதும் இல்லை. போகிறவர் யாரும் இல்லை! குறிக்கோள் என்பது எதிர்காலம் பற்றியது. எதிர்காலத்தின் மீது நமக்கு எப்போதும் ஆர்வம். அந்த ஆர்வத்தில் நிகழ்காலத்தை இழந்து விடுகிறோம்!      

~ கௌதம புத்தர் 
Download As PDF

No comments: