Friday, March 23, 2012

வாழ்க்கையை அழகாக்கிக் கொள்ளுங்கள்!


நாம் வாழ்வதற்கு பொருள் தேவைதான்.ஆனால் அதையும் தாண்டி நாம் வாழ்வதில் ஒரு பொருள் வேண்டுமல்லவா?! உண்மையில் அடுத்தவருக்கு உதவி செய்வதில்தான் அந்த பொருள் இருகிறது! மனிதன்மையும் அதுவே! நாம் செய்த உதவிகள்தான் நாம் மனதை நிறைவு செய்கிறது. அதிலும் எதிர்பார்ப்பை எடுத்துவிடுங்கள்.நாம் வாழ்வின் அர்த்தம் கூடிவிடும்.

எதுவும் நாம்முடைதல்ல-இருப்பதை இல்லாத இடத்தில் நிரப்பும் கருவி மாத்திரமே நாம். உதவுவதற்கு பொருள் வேண்டும் என்பதில்ல ஒரு வார்த்தைகூட போதுமானது. எனவே ஒவ்வொரு நாளும் உங்களின் வாழ்கையை அழகாக்கிக் கொள்ளுங்கள்!
Download As PDF