Saturday, January 28, 2012

இருக்கிறது என்பதும்,இல்லை என்பதும்....



இருக்கிறது என்பதும்,இல்லை என்பதும் நம் அனுபவத்துடன் உணர்ந்துகொள்வதில்தான் உள்ளது.

ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது.

இருவரை அழைத்து அந்த பாத்திரத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கப்பட்டது.
ஒருவர் அந்த பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் உள்ளது என்று சொன்னார்.
மற்றவர் அந்த பாத்திரம் பாதியவு காலியாக உள்ளது என்று சொன்னார்.
அனுபவத்தில் இருவரின் கூற்றும் உண்மையே!
நாம் முழுமையை புரிநது கொண்டதினால் இந்த இரண்டையும் ஏற்றுக்கொண்டோம்.

எந்த ஒன்றையும் நம் அனுபவத்துடன் உணர்ந்து தெளிவதே அறிவு!

ஒவ்வொருவரின் கூற்றும் அவரவர் கோணத்தில் என்ன சொல்ல வருகிறார் 
என்பதை அறிந்து அவர் சொல்லும் கூற்று நாம் அனுவபத்திற்கு உடன்படுமானால் 
ஏற்றுகொள்வதே  அறிவுடைமை.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
Download As PDF