Tuesday, January 10, 2012

தெய்வீக இயற்கை!


தன் உண்மையைத் தானே அறிய ஒவ்வொருவரும் முயலவேண்டும்.
மனிதனைத் துன்புறுத்தும் பல இன்னல்களுக்கு உள்ள ஒரே பரிகாரம்
அவன் தன் தெய்வீக இயற்கையை அறிந்து கொள்வதுதான்.
Download As PDF

நீங்கள் தான் பொறுப்பு.......



கடவுள் உங்களுக்காகச் செயல் புரிவாரென்றோ, தேவதைகளோ, 

காவல் தெய்வங்களோ உங்களைப் பாதுகாப்பார்கள் என்றோ 
நல்ல நேரம் உங்களுக்குத் துணை நிற்கும் என்றோ நினைக்காதீர்கள்.

இவையெல்லாம் உண்மை இல்லை. 

இதை நம்பினால் நீங்கள் துக்கம் அனுபவிப்பீர்கள். 
அப்படி நம்பினால் எப்போதுமே சரியான நாளுக்காவோ, மாதத்திற்காகவோ, 
ஆண்டுக்காகவோ தேவதைகளுக் காகவோ, தேவதூதருக்காகவோ காத்திருப்பீர்கள். 
அவ்வாறு செய்வதால் துக்கம் தான் அனுபவிப்பீர்கள்.

உங்கள் செயல்களையும், பேச்சையும், கர்மச் செயல்களையும் கவனியுங்கள். 

நல்லது செய்தால் நன்மை பெறுவீர்கள். கெட்டது செய்தால் தீமை அடைவீர்கள்.

தீதும் நன்றும் பிறன் தர வாரா.........
Download As PDF

புரிதல்!



என் மகளுக்கு பாட்டி வடை சுட்ட கதை சொன்னேன்.
கதை முடிவில் நீதி என்னவென்றால்
நீ ஒருவனை ஏமாற்றினால் உன்னை ஒருவர் ஏமாற்றுவார்-என்றேன்.

இதுவரை அமைதியா கதை கேட்ட பொண்ணு,
"சரிப்பா அந்த நரிய யார் ஏமாத்தினது?"என்று கேட்டாள்.

இப்படிதான் நாம ஒன்னு நெனச்சி சொன்னா....
புரிஞ்சிகரவங்க வேற மாதிரி புரிஞ்சிகரங்க!
என்னத்த சொல்ல!!!
Download As PDF

உண்மை அழகு !



கை ஒன்றுக்கு அழகு உண்டாவது ஆபரணங்களை அணிவதால் அல்ல! 
ஆபரணங்கள் பூட்டி யாருடைய கையையும் அலங்கரித்துவிடலாம்.

உண்மையில் அடுத்தவருக்கு உதவும் பொழுதே
அந்த கை அழகுடையதாகிறது!
Download As PDF

எல்லாம் எண்ணங்களே!


நம் தோற்றத்தை கண்ணாடியில் அழகுபடுத்திக்
கொள்வதுபோல் நம்மை நமது எண்ணங்களாலும்
செய்கைகளாலும் அழகுபடுத்திக் கொள்ளலாம் .
உங்களின் எண்ணங்களை முதலில் உங்களின்
ரசனைக்குரியதாக அழகுப்படுத்திக் கொள்ளுங்கள்.
அது நிச்சயமாக அடுத்தவரின் ரசனைக்குரியதாகவும் இருக்கும்
.
Download As PDF

Monday, January 9, 2012

என்னை அறிய!





விளக்கின் ஒளியில் அனைத்தையும் காணலாம்.
மேலும் விளக்கை காண அதன் ஒளி ஒன்றே போதுமானது!
அதுபோன்று
அனைத்தையும் நான் காண்கிறேன்.என்னை காண
என் உணர்வின் இருப்பு ஒன்றே போதும்!
Download As PDF