Tuesday, January 10, 2012

நீங்கள் தான் பொறுப்பு.......



கடவுள் உங்களுக்காகச் செயல் புரிவாரென்றோ, தேவதைகளோ, 

காவல் தெய்வங்களோ உங்களைப் பாதுகாப்பார்கள் என்றோ 
நல்ல நேரம் உங்களுக்குத் துணை நிற்கும் என்றோ நினைக்காதீர்கள்.

இவையெல்லாம் உண்மை இல்லை. 

இதை நம்பினால் நீங்கள் துக்கம் அனுபவிப்பீர்கள். 
அப்படி நம்பினால் எப்போதுமே சரியான நாளுக்காவோ, மாதத்திற்காகவோ, 
ஆண்டுக்காகவோ தேவதைகளுக் காகவோ, தேவதூதருக்காகவோ காத்திருப்பீர்கள். 
அவ்வாறு செய்வதால் துக்கம் தான் அனுபவிப்பீர்கள்.

உங்கள் செயல்களையும், பேச்சையும், கர்மச் செயல்களையும் கவனியுங்கள். 

நல்லது செய்தால் நன்மை பெறுவீர்கள். கெட்டது செய்தால் தீமை அடைவீர்கள்.

தீதும் நன்றும் பிறன் தர வாரா.........
Download As PDF

No comments: