Saturday, June 18, 2011

பெரிய துறவி


கடவுள் நம்பிக்கை சிறிதும் இல்லாத பணக்காரர் 

ஒருவருக்கு இராமகிருஷ்ண பரமஹம்சருடன் 
உரையாடும் வாய்ப்பு கிட்டியது.

பேசிக்கொண்டிருக்கும்போது "சுவாமி தாங்கள் 

கடவுளுக்காக தாங்கள் வாழ்க்கையை துறந்து விட்டீராமே"என்றார்.அதற்கு சிரித்தமுகத்துடன்,
"நான் துறவிதான்.ஆனால் என்னைவிட பெரிய துறவி 
நீதான்" என்றார். இராமகிருஷ்ணர்.

அவரின் பதிலை கேட்ட செல்வந்தருக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது போலானது.
திகைப்பு மேலிட,"என்ன சுவாமி சொல்கிறீர்கள்?உங்களைவிட நான் பெரிய துறவியா?" என்று கேட்டார்.
Download As PDF

சிறந்த வாழ்க்கை


உற்றார் உறவினரிடம் தாட்சண்யத்துடனும்,
உறவினர் அல்லாத மற்றவரிடம் தயையுடனும்,
மதிகேடர்களிடம் தந்திரமாகவும்.
பண்புள்ளவர்களிடம் அன்பாகவும்,
ஆட்சியாளர்களிடம் நீதியுடனும்,
கற்றறிந்த பண்டிதர்களிடம் தன்னடக்கத்துடனும்,
எதிரிகளிடம் தைரியத்துடனும்,
பெரியவர்களிடம் பொறுமையுடனும்,
பெண்களிடம் மதிநுட்பத்துடனும் இருக்கும் 
மிகத் திறமையான மனிதர்களால் தான் 
வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.


                                                    -பிருகத்ஹரி நீதி.


Download As PDF

உள்ளதை சொல்கிறேன்


பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை.
திருப்தியிலும் உயர்ந்த இன்பமில்லை.
ஆசையிலும் பெரிய தீமையில்லை.
கருணையிலும் பெரிய அறமில்லை.
மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.

Download As PDF

Thursday, June 16, 2011

நிம்மதி இழப்பது எதனால்?

ஒரு துறவி இருந்தார்.அவரிடம் பணக்காரர் ஒருவர் வந்தார்.
சுவாமி,என்னிடம் நிறைய செல்வமிருந்தும் நிம்மதி இல்லை.
என்ன காரணம் என்பது புரியவில்லை? என்று கேட்டார்.
அதற்கு துறவி பதில் சொல்லவில்லை. 

அங்கே விளையாடிகொண்டிருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.அதன் கையில் ஒரு மாம்பழத்தை கொடுத்தார்.குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக்கொண்டது.அடுத்து ஒரு பழத்தை கொடுத்தார்.

அதையும் இன்னொரு கையால் வாங்கிக்கொண்டது.மீண்டும் ஒரு பழத்தை கொடுத்தார்.தன்னுடைய ஒருகையால் இருபழங்களையும் மார்போடு அணைத்துக்கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது.
Download As PDF

பற்று.


ஒரு ஊரில் துறவி ஒருவர் இருந்தார்.அவரிடம் பலபேர் சீடர்களாக இருந்து தனக்கு ஏற்படும் ஐயங்களை கேட்டு 

தெளிவு பெற்றனர்.ஒருநாள் ஒரு சீடன் அவரிடம் 
"ஐயா.பற்றுகளை விட்டால்தான் இறைவனை அடைய முடியுமா?பற்றுகளை வைத்துக்கொண்டே நாம் முயற்சி 
செய்து இறைவனை அடைய முடியாதா?"என்று கேட்டான்.

 

Download As PDF

Wednesday, June 15, 2011

மிக உயர்ந்தவர்கள்.


ரு விஷயத்தை தெரியாதவர்களைவிட தெரிந்தவர்கள் உயர்ந்தவர்கள்.விஷயத்தை தெரிந்தவர்களைவிட மனதில் பதிந்தவர்கள் உயர்ந்தவர்கள்.மனதில் பதிந்தவர்களைவிட விஷயத்தை புரிந்துக்கொண்டவர்கள் உயர்ந்தவர்கள்.
புரிந்துகொள்பவர்களைவிட அவற்றை செயல்படுத்துபவர்கள் 
மிக உயர்ந்தவர்கள்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
Download As PDF

Sunday, June 12, 2011

மூன்று குற்றங்கள்.


வியாசர் தான் செய்த மூன்று குற்றங்களுக்காகத் தன்னை மன்னிக்கும்படி இறைவனிடம் வேண்டினார்.
என்ன அந்த மூன்று குற்றங்கள்?

அவர் வேண்டுதல்:
1.இறைவனே,நீங்கள் உருவமற்றவர்,ஆனால் எனது தியானத்தில் 
   நான் உங்களை உருவம் கொண்டவராகப் பாவித்து தியானம் செய்கிறேன்.
 
2."நீங்கள் வாக்கிற்கும்,மனதிற்கும் எட்டாதவர்."ஆனால் உங்கள் மீது தோத்திரங்கள் பாடியுள்ளேன்.
 3."நீங்கள் எங்கும் வியாபித்திருப்பவர்."ஆனால்,நானோ பல 
Download As PDF