Friday, November 18, 2011

ஆன்ம இலக்கை அடைய சிறந்த வழி எது?


அடைவதற்கு என்று இலக்கு ஒன்றும் கிடையாது.
எதையோ பெறுவதற்கும் ஏதுமில்லை.
ஆன்மாவே நீங்கள், அதாவது, ஆன்ம சொரூபமாகவே 

நீங்கள் எப்போதும் இருந்து வருகிறீர்கள். 

ஆன்மாவைப் பற்றிய உண்மையை உறுதிப்படுத்த, '

ஆன்மாவாகவே இருக்கிறோம்' என்று உணர்வதைத் தவிர 
வேறொன்றும் சொல்வதற்கில்லை.

கடவுளை அல்லது ஆன்மாவைக் காண்பது என்றால்,
ஆன்மாவாகவே இருப்பது, அதாவது நீங்கள் உண்மையில்
உள்ளபடி இருப்புக் கொள்வதே ஆகும்.


'காண்பது' என்றால் நிலைபேறு கொள்வது. ஆன்மாவாகவே
இருக்கும் நீங்கள் ஆன்மாவை எட்டுவது எவ்வாறு என்று அறிய விரும்புகிறீர்கள்!

'உடலை நான்' என்கிற எண்ணத்தைக் கைவிடுக. புறப் பொருட்கள், 

தோற்றங்கள் பற்றிய எண்ணங்கள், அதாவது, அநாத்ம விஷயங்கள், 
யாவற்றையும் தவிர்க்கவும். புறப் பொருட்களைப் பற்றிய எண்ணங்களில் 
மனம் வெளிமுகமாக மேயத் தொடங்கும்போதே அதை நிறுத்தி மெய்யான 
நான் என்கிற உள்ளுணர்வில் - பதிய வையுங்கள்.
நீங்கள் செய்ய வேண்டிய முயற்சி இம்மட்டுமே.

மனம் முயற்சியின்றியே விருத்தியற்ற நிலையை சகஜமாக அடையும் வரையில், 

அதாவது அகங்கார-மமகாரங்கள், முற்றிலுமாக நசிக்கும் வரையில் சாதனையைத் 
தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
Download As PDF

Monday, November 14, 2011

மனித சக்திகள் இங்கே வீணடிக்கப்படுகிறது.


இன்றைய மனிதன் தன் வாழ்நாளில் தனது அடிப்படை தேவையான உணவு,உறைவிடம் 

இவற்றிற்கே தன் நேரத்தையும்,சக்தியையும் முழுமையாக செலவழித்து விடுகிறான்.

போதாகுறைக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தன்னை
முழுவதுமாக இழந்துவிடுகிறான்.தன் சுயதேவைக்கே (சுயநலத்திற்கே) 

நேரம் முழுவதும் சென்றுவிடுவதால் பின் அவனின் சுய சிந்தனைக்கும்,
கற்பனைக்கும் நேரமேது....


ஒரு நல்ல அரசு மனிதனின் இந்த அடிப்படை தேவையை பூர்த்தி செய்தால் 

அங்கே மனித சக்திகள் வளர்க்கப்படும். மனிதனின் பொதுநல போக்கு வளரும்.
 நல்ல தரமான மனிதர்கள் தோன்றுவார்கள்.சிந்தனைகள் மேம்படும்.கலைகள் வளரும்.
அவர்களது ரசனையும் கூடும்.

நாகரீகம் வளரும்.பொற்காலம் என்பதை கண்களால் காணலாம்.
பல பொற்காலங்களை கண்ட சமுதாயம் இது.
உலகிற்கு உயரிய நாகரீகங்களை வழங்கிய நாடு இது.

இன்று வெறும் அடையாளங்களை மட்டுமே சுமந்துக் கொண்டு சவமாய் காட்சி அளிக்கிறது 

மன்னன் எப்படியோ மக்களும் அவ்வழியே என்பார்கள்.ஒரு நல்ல தொலைநோக்கு இல்லாத தலைவர்களால் சுதந்திரம் பெற்றும் நாம் இன்னும் அடிமைகளாக வாழ்கிறோம்.மனித சக்திகள் 

இங்கே வீணடிக்கப்படுகிறது.

நெஞ்சு பொறுக்குதில்லையே!!

இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைந்து விட்டால்..... 
Download As PDF