Friday, November 18, 2011

ஆன்ம இலக்கை அடைய சிறந்த வழி எது?


அடைவதற்கு என்று இலக்கு ஒன்றும் கிடையாது.
எதையோ பெறுவதற்கும் ஏதுமில்லை.
ஆன்மாவே நீங்கள், அதாவது, ஆன்ம சொரூபமாகவே 

நீங்கள் எப்போதும் இருந்து வருகிறீர்கள். 

ஆன்மாவைப் பற்றிய உண்மையை உறுதிப்படுத்த, '

ஆன்மாவாகவே இருக்கிறோம்' என்று உணர்வதைத் தவிர 
வேறொன்றும் சொல்வதற்கில்லை.

கடவுளை அல்லது ஆன்மாவைக் காண்பது என்றால்,
ஆன்மாவாகவே இருப்பது, அதாவது நீங்கள் உண்மையில்
உள்ளபடி இருப்புக் கொள்வதே ஆகும்.


'காண்பது' என்றால் நிலைபேறு கொள்வது. ஆன்மாவாகவே
இருக்கும் நீங்கள் ஆன்மாவை எட்டுவது எவ்வாறு என்று அறிய விரும்புகிறீர்கள்!

'உடலை நான்' என்கிற எண்ணத்தைக் கைவிடுக. புறப் பொருட்கள், 

தோற்றங்கள் பற்றிய எண்ணங்கள், அதாவது, அநாத்ம விஷயங்கள், 
யாவற்றையும் தவிர்க்கவும். புறப் பொருட்களைப் பற்றிய எண்ணங்களில் 
மனம் வெளிமுகமாக மேயத் தொடங்கும்போதே அதை நிறுத்தி மெய்யான 
நான் என்கிற உள்ளுணர்வில் - பதிய வையுங்கள்.
நீங்கள் செய்ய வேண்டிய முயற்சி இம்மட்டுமே.

மனம் முயற்சியின்றியே விருத்தியற்ற நிலையை சகஜமாக அடையும் வரையில், 

அதாவது அகங்கார-மமகாரங்கள், முற்றிலுமாக நசிக்கும் வரையில் சாதனையைத் 
தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
Download As PDF

No comments: