Thursday, May 19, 2011

அறிவு என்னும் கதவு திறந்திருந்தால்...



சுபி ஞானி ஒருவரிடம் ஒரு விவசாயி வந்தான்.

''ஐயா.என் மனைவி வீடு முழுவதும் ஆடு,மாடு,கோழி
என்று வளர்க்கிறாள்.அதனால் வீட்டிற்குள் நுழைந்தாலே 

ஒரே துர்நாற்றமாக இருக்கிறது.இதற்கு நீங்கள்தான் ஒரு வழி 
சொல்ல வேண்டும்.''என்று அவன் ஞானியிடம் சொன்னான்.

அவன் வீட்டைக் கவனித்த அந்த ஞானி சொன்னார்,

''உன் வீட்டில் தான் ஜன்னல்கள் இருக்கின்றனவே?
அவற்றை ஏன் மூடி வைத்திருக்கிறாய்?ஜன்னலைத் திறந்து 
விட்டால் காற்று நன்றாக வரும்.துர்நாற்றமும் போய்விடும்.

''உடனே விவசாயி பதற்றத்துடன் ,''ஐயையோ,ஜன்னலைத் திறந்து 

விட்டால் என் புறாக்கள் எல்லாம் பறந்து போய்விடுமே?''என்றான்.
அதிக முக்கியத்துவம் இல்லாத புறாக்களுக்காக ஜன்னலைத் 

திறக்காமல் துர் நாற்றத்தை அவன் சகித்துக் கொள்கிறான்.

அதே போல நாமும் முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை 

எண்ணிக்கொண்டே நமது அறிவு என்னும் ஜன்னலை திறவாதிருக்கிறோம்.

திறந்திருந்தால் அறியாமை வெளியேறியிருக்கும்.

அன்பால் உங்கள் உள்ளம் நிறைந்திருக்கும்.
Download As PDF

No comments: