Wednesday, December 14, 2011

சிந்தித்து தெளிந்து இரண்டற கலப்பதுவே முக்தியாம்.





என்னை அறிவென்றான் என் அறிவில் ஆனந்தந்
தன்னைச் சிவமென்றான் சந்ததமும் – என்னைஉன்னிப்
பாரா மறைத்ததுவெ பாசமென்றான் இம்மூன்றும்
ஆராயந் தவர்முத்த ராம்.-சிவபோக சாரம் 


என் உடல்,என் மனம் என்னும் இவை என் உடைமைகள் அன்றி நானில்லை.
எங்கே எனது என்று பகுக்க முடியாமல் அறியும் இந்த "நான்" மட்டும்
எஞ்சி இருக்கிறதோ அந்த அறிவே நீயாம்!

நான் என்ற இந்த அறிவும் (நினைவும்) தோன்றி மறைவதால்,
(நினைப்பும்,மறப்புமாய் இருப்பதால்)-அதன் தோற்றதிற்கும்,மறைவிற்கும்
ஆதாரமான ஒரு பொருள் இருக்கவேண்டும்.அறிவிற்கறிவான அந்த
ஆதாரநிலையே ஆனந்தமயமான சிவமாம்.
(இன்பதுன்பமற்ற நிலையே ஆனந்தம்).

அறிவான தன்னையும்,தனக்கு ஆதார தலைவனையும் மறைப்பதுவே
ஆணவமாகிய இருளாம்.ஆணவம்,கன்மம்,மாயை இவையே பாசமாம்.

அறிவாகிய தன்னையும்,
இந்த நினைவிற் ஆதார அறிவையும்,
இவ்விரண்டையும் அறிய ஒண்ணாது மறப்பது
ஆகிய இம்மூன்றையும் சிந்தித்து தெளிந்து இரண்டற கலப்பதுவே முக்தியாம்.
Download As PDF

No comments: