Saturday, March 26, 2011

மனித உடலில்தான் தன்னை அறியும் அறிவு உள்ளது.




நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.

ஒவ்வொரு ஜீவனும் அறியாமையாகிய இருளிலிருந்து
தன்னை விடுவிக்க பிறவிவேண்டி இறைவனிடம் மன்றாடி
தாயின் கருவில் பத்துமாதம் இருந்து நந்தவனமாகிய இந்த பூஉலகில் 

உடலுடன் பிறக்கிறது.இந்த அறிய மனித உடலில்தான் தன்னை 
அறியும் அறிவு உள்ளது.

உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே!

யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்.............
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

"உடம்பினைப் பெற்ற பயனாயது எல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண்"

ஆனால் பெற்ற பெரும்பயனை மறந்து தன்னை "உடலாக" 

அபிமானம் கொள்கிறான்.இதுவே அஞ்ஞானம்.

"நான்","எனது" என்ற அபிமானத்தால் மனிதன் தன்னை இழந்துவிடுகிறான்.

இதுவே இப்பாடலின் பொருள்.
Download As PDF

No comments: