Saturday, March 26, 2011

பதம் முக்கியம்.



தன்ன தென்றுரை சாற்று வனவெலாம்
நின்ன தென்றனை நின்னிடத் தேதந்தேன்
இன்னம் என்னை யிடருறக் கூட்டினால்
பின்னை யுய்கிலன் பேதையன் ஆவியே.
                                         தாயுமானவர்.

என்னுடையவை என்று சொல்லும் பொருள் அனைத்தையும்
உன்னுடையவை என்றுணர்ந்து உன்னிடத்தே தந்தேன்.
இன்னும் எனக்கு சோதனையை கூட்டினால்
உய்ய வேறு வழியறியாது இந்த பேதை உயிர் உழலுமே!

சமயம் என்பதற்கு பக்குவப்படுத்துதல் என்று பொருள்.
சாதத்தை பக்குவத்திற்கு மேல் சமைத்தாலும் குழைந்துவிடும்.
பக்குவத்திற்கு முன் வடித்தாலும் அரைவேக்காடு ஆகிவிடும்.
ஆக பதம் முக்கியம்.

இறைவனே!அடியனை அதிக சோதனைக்கு ஆட்படுத்தி 

குழைத்துவிட்டால் வேறு வகையறியேன் என்பது பொருள்.
Download As PDF

No comments: