Saturday, March 26, 2011

அன்பே வெறுப்பை விரட்டும்.





இவ்வுலகில் வெறுப்பு வெறுப்பை விரட்டாது.
அன்பே வெறுப்பை விரட்டும்.
இதுதான் விதி.தொன்மையான 

தீர்ந்து போகாத விதி.

உண்மையான அன்பு உங்கள் உள்ளத்தின்
மகிழ்ச்சியின் இடையறாத வெளிப்பாடு.
அதைப் பகிர்த்து கொள்வதற்கும் பொழிவதற்கும்
காரணமே தேவையில்லை.
வேறு நோக்கமே தேவையில்லை.பகிர்ந்து
கொள்ளும் மகிழ்விற்காகவே பகிர்ந்து கொள்வது.
வெறுப்பு வெறுப்பை உருவாக்கி விடுவதுபோல
அன்பு அன்பையே உருவாக்கும்.

அன்பு செய்யுங்கள்.இந்த உலகம் மீண்டும் சுவர்கமாகும்.அன்பின் 

எல்லையற்ற அழகே அதற்கு எந்த அடிக்குறிப்பும் தேவை இல்லை
என்பதுதான். அன்பு காரணமில்லாமல் நிகழ்வது.
அது உங்களின் பரவசத்தின் வெளிப்பாடு.
உங்கள் இதயத்தின் பகிர்வு.உங்கள் இருப்பின்
பாடலைப் பகிர்ந்து கொள்வது.
உங்கள் மகிழ்வைப் பகிர்ந்து கொள்வது.

புத்தரின் தம்மபதம்.
Download As PDF

No comments: