Saturday, March 26, 2011

தன்னில் விளங்கும் ஞானத்தை அறிவதே.





கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்.


மனிதன் கல்வியினால் அடையத்தக்க பெரும்பயன் என்னவெனில் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களிலும் நீக்கமற நிறைந்துள்ள வாலறிவாய் விளங்கும் பேரறிவை தன்னுள்ளும் உணர்வதே மனிதன் தான் கற்ற கல்வியினால் அடைகின்ற பெரும்பயனாகும்.

கேள்வி, ஊறு,ஒளி,சுவை,நாற்றம் என்ற புலன்களை
கொண்டு காது,தோல்,கண்,நாக்கு,மூக்கு என்ற பொறி வழியே
ஓசை/சப்தம்,-தட்ப/வெட்பம்,கடினம்/மேன்மை,-காட்சி-அறுசுவை,
நாற்றம்/துர்நாற்றம் ஆகியவற்றின் தொகுப்பாகியஇவ்வுலகத்தை விருப்பு,வெறுப்பை தோற்றுவிக்கும் மனதை கொண்டு அனுபவிப்பவன் 
நான் என்னும் அகங்காரத்தை சித்தப்படுத்தி தெளிவற்ற புத்தியால் 
காணப்படும் இவ்வுடலே நான் என்னும் நினைவில் வாழும் மனிதர்களே!

இவ்வைந்து அறிவிற்கும் ஆதாரமாய் மேலும் உள்ளும் புறமும் 
நிறைந்து விளங்குவதே வாலறிவு எனப்படும்.

பார்வை என்ற புலனை கொண்டு கண் வழியே காட்சியாகிய
உலகை காணலாம்.ஆனால் பார்வைக்கு ஆதாரமாய் விளங்கும் அறிவை 
அந்த பார்வையை கொண்டு அறிய இயலாது.

பார்வை என்ற அறிவையே காட்சியை கொண்டுதான் உணரமுடியும்.
இப்படி எல்லா அறிவுக்கும் ஆதாரமாய் விளங்கும் மூலமே வாலறிவாகும்.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும். 214

இங்கணம் அனைத்தும் தன்மயமாய் விளங்கும் அறிவை உணர்வதால் நன்றியுணர்வு தோன்றும்.அதுவே தொழுதல்.

ஆக கல்வியின் பயனே தன்னில் விளங்கும் ஞானத்தை அறிவதே.
Download As PDF

No comments: