Saturday, March 26, 2011

"நான், எனது" எனும் இரைச்சல்களில் வேறெது கேட்கும்?



"என்னுள் ஒளிரும் நிலவை என் குருட்டுக் கண்கள் அறியா.
அந்நிலவும் பகலவனும் கூட 
என்னுள்ளேயே இருந்தும்.

என்னுள் ஒலிக்கும் ஓங்காரத்தை என் செவிட்டுச் செவிகளும் கேளா."
"நான், எனது" எனும் இரைச்சல்களில் வேறெது கேட்கும்?
எப்போது
"நான், எனது" என்னும் ஓசைகள் ஒடுங்குகிறதோ
அப்போது இறைவனின் வேலைகளும் ஓய்ந்துவிடும்.


ஏனெனில் இறைவனின் வேலையே நமக்கு
ஞானம் பெற்றுத் தருவதுதான்.


ஞானம் வந்தபின் நம்மிடம் அவனுக்கு வேலையுமில்லை.
மலர் மலர்வது காய்க்கத்தான்.


கபீர்.
Download As PDF

No comments: