Saturday, March 26, 2011

காலத்தை பற்றிய குறிப்பு.

பொழுது போகவில்லை.குறைந்தபட்சம் பொழுது எப்படி போகுதுன்னாவது தெரிஞ்சிக்கலாம் வாங்க...

பொழுது என்பது காலம் என்று பொருள்படும். காலம்சிறுபொழுது, பெரும்பொழுது என்று இரண்டு வகையாகப்பிரிக்கப்பட்டுள்ளது.

சிறு பொழுது

சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும்.சிறுபொழுது பின்வருமாறு அமையும்.

வைகறை - விடியற்காலம்
காலை - காலைநேரம்
நண்பகல் - உச்சி வெயில் நேரம்
எற்பாடு - சூரியன் மறையும் நேரம்
மாலை - முன்னிரவு நேரம்
யாமம் - நள்ளிரவு நேரம்
சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாகஇருப்பதை அறியலாம்.

பெரும்பொழுது

பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும்.ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறுபிரிவுகளாகப் பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால்பெரும்பொழுது எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டுமாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப்பிரிக்கப்பட்டுள்ளன.

சித்திரை, வைகாசி - இளவேனில் காலம்
ஆனி, ஆடி - முதுவேனில் காலம்
ஆவணி, புரட்டாசி - கார் காலம்
ஐப்பசி, கார்த்திகை - குளிர்காலம்
மார்கழி, தை - முன்பனிக் காலம்
மாசி, பங்குனி - பின்பனிக் காலம்
Download As PDF

No comments: