Saturday, March 26, 2011

இதுதான் இயற்கை.

ஒருவர் ஒரு புதிய வீட்டை கட்டினார்.நம் கலாச்சாரத்தில் புதிய வீடு கட்டினால் ஒரு புனிதரையோ,பெரியவரையோ அழைத்து வீட்டினை ஆசீர்வதிக்க செய்வார்கள்.

அவரும் ஒரு துறவியை அழைத்து வந்து,அவருக்கு ராஜமரியாதையுடன் 

வரவேற்று,உபசரித்து, விருந்தளித்தார்.

பின்பு அவர் குடும்பத்தினரையும்,அவர் வீட்டையும் ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்க்கு அந்த துறவி,"முதலில் உங்கள் தந்தை இறக்கட்டும்,பின்பு நீங்களும்,அதன் பின்பு உங்கள் குழந்தைகளும் இறக்கட்டும்" என்று கூறினார்.

அதை கேட்ட அந்த மனிதனுக்கு கடுமையான கோபம் வந்தது."முட்டாளே,நாங்கள் உன்னை வீட்டிற்கு அழைத்து வந்து,அரசரை போல் உபசரித்து,

விருந்தளித்து,பரிசுகள் கொடுத்து எங்களை ஆசிர்வதிக்க சொன்னால்,என் தந்தை முதலிலும்,பின்பு நானும்,என் குழந்தைகளும் இறக்கவேண்டும் என்று கூறுகிறாயே"

என்று கடிந்து கொண்டார்.மேலும் துறவி இப்படி கூறியதால்,அப்படியே நிகழ்ந்து விடுமோ என்று பயம் கொண்டார்.

அதற்கு அந்த துறவி,நான் கூறியதில் தவறில்லை.முதலில் தந்தையும்,பின்பு தங்களும்,அதன்பின்பு உங்கள் குழந்தைகளும் இறப்பதுதான் நல்லது.

நீங்கள் உங்கள் தந்தைக்கு முன் இறந்தாலோ அல்லது உங்களின் குழந்தைகள் 

உங்களுக்கு முன் இறந்தாலோ,நல்லதல்ல.எனவே முதலில் உங்கள் தந்தையும் 
பின்பு நீங்களும்,அதன் பின்பு உங்கள் குழந்தைகளும் இறக்கவேண்டும். இதுதான் இயற்கை.இப்படித்தான் வாழ்க்கை நடக்க வேண்டும்.

சிலவேளைகளில் புரிதல்கள் இப்படித்தான் தவறான அர்த்தத்தை தந்துவிடும்.

யதார்த்தத்தை தொலைத்துவிடும்.
Download As PDF

No comments: