Monday, March 28, 2011

என்னால் உனக்கு என்ன பயனுண்டு?



"உடம்பினைப் பெற்ற பயனாயது எல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண்"

உன்னுள் அறிவாய் விளங்கும் அறிவை அறியாதவரை
இறைவனை வேறெங்கும் காணமுடியாது.அந்த
அறிவை அறிவதனால் அதற்கொன்றும் ஆதாயம் இல்லை.
அறியும் நீயே! அறியாமையால் ஏற்படும் பிறவியை கடப்பாய்!

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

பொன்னாற் பிரயோசனம் பொன்படைத்தார்க்குண்டு;
பொன்படைத்தோன்தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு?

அத்தன்மையைப்போ உன்னாற் பிரயோசனம் வேணதெல்லாம் உண்டு
உனைப் பணியும்என்னாற் பிரயோசன மேதுண்டு? காளத்தி யீச்சுரனே!

பொன்னை வைத்திருப்பவருக்கு பொன்னால் ஆகும்பயன் அநேகமுண்டு.

பொன்படைத்த அவர்களால் அந்த பொன்னுக்கு என்ன பயன்?அதுபோல உன்னால் வேண்டும்பயன் அனைத்தும் வேண்டிப் பெற்ற என்னால் உனக்கு என்ன பயனுண்டு?
காளத்தி ஈஸ்வரனே
Download As PDF

No comments: