Sunday, March 27, 2011

ஆசையும்,பேராசையும்.



ஒரு பணக்காரர் தன் செல்ல பிராணியாக ஒரு ஆண் நாயை சகல வசதிகளுடன் 
வளர்த்து வந்தார்.அதை தனது மாளிகையின் வாசலில் கட்டிவைத்திருந்தார்.
வாசலின் வெளியில் தெருஓர பெண் நாய் ஒன்று அந்த ஆண் நாயை விரும்பியது,
மேலும் தனது விருப்பத்தை தினமும் அதனிடம் தெரிவித்து வந்தது.

ஆண் நாயோ அதற்கு தகுந்த பதில் தராமல் இருந்ததால் கோபமுற்ற பெண் நாய் 

அதற்கு விளக்கம் கேட்டது.அதற்கு அந்த ஆண் நாயோ நான் தற்போது சிறிது 
குழப்பமான மனநிலையில் இருப்பதால் சற்று பொருத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டது.தங்களின் மனநிலையை தெரிவித்தால் அதற்கு என்னால் 
ஆன உதவி செய்வதாக அந்த பெண் நாய் கூறியது.

அதற்கு அந்த ஆண் நாய் சொன்னது,"அது வேறு ஒன்றுமில்லை... என்னை 

வளர்கும் முதலாளியின் பெண் ஒரு பையனை காதலிக்கிறாள்.அதை அறிந்த 
முதலாளியோ மிகவும் கோபமடைந்து அவளை நோக்கி "உன்னை அவனுக்கு 
கட்டிவைப்பதற்கு பதிலாக நம்வீட்டு நாய்க்கு கட்டிவைப்பேன்" என்று கூறினார்,
அதற்காகத்தான் காத்துகொண்டிருக்கிறேன்.ஒரு வேளை அது நடக்காமல் போனால் 
உன்னை கட்டிக் கொள்கிறேன் என்று கூறியது.

இதிலிருந்து அறியும் விஷயமாவது என்னவென்றால்,
"தெரு நாய் அந்த வீட்டு நாய் மேல் பட்டது ஆசை.ஆனால் 

வீட்டு நாய் தன் முதலாளியின் பெண்ணுக்காக காத்திருந்தது பேராசை.
Download As PDF

No comments: