Friday, May 29, 2020

வாலறிவு



வாலறிவு !

கற்றதனால் உண்டாவது நூலறிவு: 
இறைவனே வணங்கி அருளநுபவம் பெறுவது வாலறிவு 

அறிவில் இரண்டு வகை உண்டு;
நூலறிவு, வாலறிவு என்பன அவை.

பல நூல்களேக் கற்று அதனல் பெறும் அறிவு நூலறிவு;
அது மூளையைச் சார்ந்தது.

அநுபவத்தோடு கூடி இறைவனிடம் ஈடுபடுவது வாலறிவு. 
அது இதயத்தோடு ஒட்டியது; ஆன்மலாபத்தைத் தருவது.


கடையிலா அறிவு,
வரம்பற்றஅறிவு,
முழுதுணர்,
வினையின் நீங்கி விளங்கிய அறிவு,
அலகிலா அறிவு,
முற்றறிவு, குற்றமற்ற அறிவு'
எனப் பொருள்படும் எனவும் கூறுவர்.

அளப்பற்கரிய தூய அறிவினை உடையவன் வாலறிவன் ஆவன்.
வாலறிவன் என்று சொல்லப்பட்டதால் கடவுள் அறிவு வடிவினன் ஆகின்றான்.

மணக்குடவர் :  "விளங்கிய அடிவினை உடையவன்" என்கிறார்.
பரிமேலழகர் : "மெய்யறிவினை உடையான்" என்கிறார்.
பரிதியார் "மேல் அறிவாளனான சிவன்" என்கிறார்.
காலிங்கர் "மாசற்ற அறிவுருவாகிய இறைவன்" என்கிறார்.

வாவாலறிவை பரை அறிவு என்பாரும் உளர் 
கரண அறிவு,
இந்திரிய அறிவு,
ஜீவ அறிவு,
ஆன்ம அறிவு
அதையும் கடந்த
கடவுளின் அறிவை அறிய அருள் வேண்டும்.

அருளால் அறியும் அறிவே வாலறிவு ஆகும்.

Download As PDF

No comments: