Friday, September 4, 2015

அறிதலும் ! புரிதலும் !



அறிதலும் ! புரிதலும் !

ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் வித்யாசம் உண்டு. அறிந்து கொள்வதற்கு அனுபவம் தேவையில்லை! புரிந்துகொள்வதற்கு அனுபவம் தேவை. ஒரு பழத்தின் சுவையை எப்படியெல்லாம் ஏட்டில் புனைந்தாலும் அதன் சுவையை சுவைத்தாலன்றி அறிய இயலாது! மேலும் பழத்தின் சுவையை கொண்டு அதன் வகையும் ஏராளம். அனுபவித்தவனே இதனை புரிந்துகொள்வான். இதையே ஏட்டு சுரைக்காய் கறிக்குதாவது காண்! என்பர். திருமூலர் ஒரு படி மேலே சென்று பின் வருமாறு உரைகின்றார்...

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்எனில் சொல்லுமாறு எங்கனே.

அனுபவத்தை ஒருவர் விளக்கமுடியாது. அனுபவமே உண்மை புரிதலுக்கு ஏற்புடையதாகும்! அறம் பொருள் இன்பம் மூன்றிக்கும் உரையுண்டாம். வீடுபேறேன்பது அனுபவமாகும்!
Download As PDF

No comments: