Wednesday, September 2, 2015

ஒன்றாக காண்பதே காட்சி !


ஒன்றாக காண்பதே காட்சி !

பொன் அணிகலன்களாக மாறும்போது அதற்கு பல்வேறு பெயர்களும் பயன்பாடுகளும் உண்டு! இருப்பினும் அவை அனைத்தும் மதிப்பிடும் போது தங்கமே!

ஒரு பக்தர் ஒரு விநாயகர் சிலையையும் ஒரு எலி சிலையும் தலா ஒரு கிலோ எடையில் செய்திருந்தார். கஷ்ட காலத்தில் முதலில் எலி சிலையை விற்றார். பின்னர் விநாயகர் சிலையை விற்க வந்தபோது வியாபாரி அதே தொகையை தந்தார்.

அந்த பக்தருக்கு கோபம் வந்து விட்டது. அந்த வியாபாரியிடம் அவர் என்னய்யா நீர் முதலில் அவர் வாகனத்திற்கு தந்த அதே தொகையையே விநாயகருக்கும் தருகிறாய் ! என கேட்டார்.

அதற்கு வியாபாரி இரண்டும் தலா ஒரு கிலோ எடையே கொண்டிருக்கிறது என விளக்கிறார். இங்கே இருவரின் மனோபாவமும் வெவ்வேறு ! உருவங்கள் வெவ்வேறாக இருப்பினும் அவை மதிப்பிலும் தன எடையிலும் ஒன்றே!

அது போன்று காணும் இந்த உலகவும் காண்பவரும் காட்சியும் ஒன்றே ! ( கனவில் காணும் பொருள்களும் காட்சியும் காண்பவனும் ஒருவனே! அது போன்றே விழிப்புற்ற ஒருவருக்கு இந்த உலகமும் கனவே !)
Download As PDF

No comments: