Wednesday, September 2, 2015

ஒன்றாக காண்பதே காட்சி.




ஒன்றாக காண்பதே காட்சி !

ஒரு பொருளை காணும் போது 
அதில் காண்பவன், 
காணப்படும் பொருள் இவ்விரண்டை இணைக்கும் காட்சி 
என மூன்று நிலைகள் உண்டு !

தன்னையும், தனது அறிவையும், அறியப்படும் பொருளையும் பகுத்து உணரும்படி நில்லாமல் அறியப்படும் பொருளில் அழுந்தித் தன்னையும் தனது அறிவையும் மறந்து அப்பொருளோடு ஒன்றுபட்டு நிற்கும்போதே இன்ப நுகர்ச்சி உளதாகும். இவ்வுண்மை உலக இன்பத்திற்கும் பொருந்தும்; பேரின்ப நுகர்ச்சிக்கும் பொருந்தும்.

கனவில் பெண்ணிடம் இன்பம் துய்க்கும் நிலையில் இங்கே காண்பவனும் - காட்சியும் - காணப்படும் பொருள் அனைத்தும் (அவனே ) ஒன்றே!
Download As PDF

Saturday, August 22, 2015

சென்னப் பட்டினத்தின் தொன்மை வரலாறு.

சென்னப் பட்டினத்தின் தொன்மை வரலாறு !

கடலும் கரையும் சார்ந்த பகுதிக்கு பட்டினம் என்று பெயர். சென்னப்  பட்டினம் என்பதற்கு நல்ல பட்டினம் என்று பொருள்.வேர் சொல் சென்ன கேசவ பெருமாள் என்ற ஆலயம் வழி வந்ததாக இருக்கலாம்! ( சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ).

2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு நாதரின் பன்னிரு  சீடர்களில் ஒருவரான தோமையர் ( Saint Thomas ) கோழிகோடு வழியே வந்து பின்னர் சென்னையில் போதித்த வரலாறு உள்ளது. ( அன்னாரின் அடக்க ஸ்தலம் Saint Thomas Mount யில் உள்ளது  ). சமகாலத்திய திருவள்ளுவரின் தோற்ற ஸ்தலமான மைலாப்பூர் உள்ளது. மேலும் திருவள்ளுவரின் பழைய ஆலயம் ஒன்று இங்கு உள்ளது.


பூம்பாவை என்பவர் எழாம் நூற்றாண்டில் மயிலாப்பூரில் வாழ்ந்த பெண்ணாவார். இவர் பாம்பு தீண்டி இறந்து போக, இவரது சாம்பலிலிருந்து திருஞானசம்பந்தர் பதிகம் பாடி உயிர்ப்பித்தார். பூம்பாவை சந்நிதி மயிலாப்பூர் கபாலிசுவரர் சிவாலயத்தில் அமைந்துள்ளது. நெய்தல் நிலம் என்பது  ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன.ஐந்திணைக் கருப்பொருளைக் கூற வந்த இறையனாரின் அகப்பொருள் நூல் ' நெய்தல் திணைக்கு மரம் புன்னையும், ஞாலழும் கண்டலும் " என்று குறிப்பிடுகிறது. கபாலீச்சரம் ஸ்தல விருட்சம் புன்னை மரமாகும்.


இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.
(~ தகவல் விக்கிபீடியா.)


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் நூறு வெண்பாக்களை கொண்டுள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் பேயாழ்வார்.  இவரின் தோற்ற ஸ்தலம் மைலாப்பூர் .



பட்டினத்து அடிகள் வழிபட்ட திருஒற்றியூர் கோயில் மிக தொன்மையானது. இவரது காலம் கி.பி. 10 - ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகும்.

திரு அல்லி கேணி பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்று. இக்கோயில் முதலில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது.



காரைக்காலம்மையார் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். இசைத் தமிழால் பாடியவர்களில் இவரே முதலாமவர். ஒரு பாடலின் இறுதி வார்த்தையை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாகப் பயன்படுத்தி எழுதும் அந்தாதி முறையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியவரும் இவரே. இவரின் அடக்க ஸ்தலம் திருவலங்காட்டில் உள்ளது.



திருமுல்லை வாயில் திருக்கோயிலில் சோழமன்னர்களில், பரகேசரிவர்மன் உத்தமசோழன், முதலாம் இராசேந்திர சோழன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன் இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பாண்டியதேவன் காலத்திலும்; விசயநகர வேந்தர்களில் ஹரிஹரராயர் II, இரண்டாம் தேவராயருடைய தம்பி பிரதாப தேவராயர், வீரப்பிரதாபபுக்க ராயர், வீரப்பிரதாப மல்லிகார்ச்சுன தேவமகாராயர் இவர்கள் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளன்றி, பார்த்திவேந்திரவர்மன் காலத்திலும் பொறிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுக்கள் உண்டு.

மழவரையர் மகளாரும், கண்டராதித்த பெருமாள் தேவி யாரும், ஆகிய செம்பியன்மாதேவியார், புழற்கோட்டத்து அம்பத்தூர் நாட்டு அம்பத்தூர் ஊராரிடமிருந்து நிலம் வாங்கி, இத் திருமுல்லை வாயில் கோயிலுக்கு உத்தமசோழ தேவரின் பதினான்காம் ஆட்சி யாண்டில் கொடுத்துள்ளனர். மண்டபத்துத் தூணில் உள்ள முதலாம் இராசேந்திரசோழ தேவன் கல்வெட்டு, அந்த மண்டபம் கட்டப் பட்டதைக் குறிப்பிடுகின்றது.

இது போன்றே வியாசர்பாடி திருவான்மியூர் கோயம்பேடு போன்ற இடங்களின் செய்திகள் மிகவும் தொன்மையானது. பல்லவர்கள் கால சிற்பங்களும் கடல் கொண்ட ராயபுரம் விஸ்வநாதர் ஆலயமும் காலத்தை பறை சாற்றுபவை. பற்பல கடற்கோள்களால் ( சுனாமி ) இதன் வரலாறு கிடைக்கவில்லை. இதன் பாதிப்பை உணர்ந்த மன்னர்கள் தங்களின் தலைநகர்களை  இக்கரைகளை தவிர்த்தே அமைத்தனர்.

நெய்தல் நிலத்தை சார்ந்த மீனவ குடிகளே இதன் ஆதி மக்கள்! 
Download As PDF

அழுகை என்பது அவமானமல்ல!



















அழுகை என்பது அவமானமல்ல...
வெளிகாட்ட முடியாத உணர்வுகளின் உண்மை வெளிப்பாடு அது.
உங்கள் கண்ணீர் துளிகளை ஒருபோதும் மறைக்காதீர்கள் ! அவை சிந்தட்டும்.... 
மேலும் அவை நீங்கள் இயல்பாக மிக எதார்த்தமாக இருப்பதற்கான அடையாளம் !


Download As PDF

அன்பின் உண்மை !

அன்பின் உண்மை !

மலரின் அழகு உங்களை கவர்த்தால் அதை பறித்து விடாதீர் ! 
மாறாக அதனை செடியிலேயே விட்டுவிடுங்கள் ! 
ஒருவேளை அதன் மீது உங்களுக்கு அன்பிருந்தால் ....

ஏனெனில் பறித்தவுடன் அது வாடிவிடும் ! செடியிலில் இருந்தால் இன்னும் சில நாட்களுக்கு அதன் ஜீவிதம் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும்!

உண்மையான அன்பு என்பது எதையும் தனதாக்கிக் கொள்வதல்ல! உண்மையான அன்பு என்பது எதையும் போற்றி பாதுகாப்பதே !

~ அன்பன் ஓஷோ.
Download As PDF

Friday, January 31, 2014

கற்றதனால் ஆய பயன்!


கற்றதனால் ஆய பயன்!

பார்வை கேள்வி முகர்வு சுவை பரிசம் சிந்தை முதலிய அறிவுகளுக்கு ஆதாரமாய் விளங்கும் தன் சுய சொரூபத்தை அறிந்து ( உணர்ந்து ) கொள்வதே கல்வின் உண்மை பயன். புலன்களின் வழியே பெறுகின்ற அறிவு மாத்திரம் ஒருவனின் பிறவி பயனை அடைய செய்வதில்லை!

"கள்ள புலனைந்தும் காளாமணி விளக்கே!" என திருமந்திரமும்
"கள்ள புலனைந்தும் வஞ்சனையை செய்ய" என மாணிக்கவாசகரும் உரைப்பதை காணலாம்.

ஒருமையின் கண் தான் கற்ற கல்வி என்பது கண்ணுக்கு கண்ணாக காதுக்கு காதாக ஒவ்வொரு அறிவிற்கும் ஆதாரமாய் நிற்கின்ற அந்த ஒருமையின் கண்ணான தூய.அறிவை (வாலறிவை ) அறிவதாம்! கண்ணுக்கு ஆதாரமாய் நின்றாலும் கண்ணால் அதை காண முடியாது.மற்ற அறிவுகளின் நிலையும் அதுவேயாம்.

அறிகின்ற அறிவுகளுக்கு அப்பாலாய் தனித்து நிற்பதே தூய அறிவாம். அதுவே ஒருவனது உண்மை சொரூபம். இதனையே திருமூலர் கல்வியின் அதிகாரத்தில்

"குறிப்பறிந் தேன் உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. "

"நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன் றிலாத மணிவிளக் காமே."

என்றும் கல்வின் உண்மை நிலையை விளக்குகிறார்.

"கற்றதனால் ஆய பயனென்கொல்
வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்".
என இதனையே வள்ளுவரும் வழிமொழிகின்றார்.

ஒருமையின் கண் தான் கற்ற கல்வி என்பதன் உண்மை பொருளை அறிந்து உணர்ந்து நிற்பதே கல்வியின் உண்மை பயனாம்!

Download As PDF

Wednesday, January 29, 2014

குறளும்! மறைப்பொருளும்!



எழுத்துக்கள் அனைத்தும் புள்ளியை ( அகரம் ) ஆரம்பமாகவும் ஆதாரமாகவும் கொண்டது. அனுபவத்திற்கு இடமான இந்த புவனமும் அனுபவிப்பதற்கு ஆதாரமான இந்த உடலும் ஆதியாய் நின்ற வாலறிவையே முதலாக கொண்டது ஆகும்.

அகரமும் உதலமும் முதலான பொருள் ஆதி!

உலகு என்ற சொல் இந்த பிரமாண்டத்தையும் உடலையும் குறிக்கும்.

இதையே தாயுமானவரும்

"தன் அருள் வெளிக்குள்ளே
      அகிலாண்ட கோடி எல்லாம்
தங்கும்படி இச்சை வைத்து உயிர்க்கு உயிராய்த்
     தழைத்தது எது? "

என  அகிலமாகவும் உயிருக்கு உயிராய்  நின்று  தழைத்தது "ஆதியாய் நின்ற அறிவு" என சுட்டுகிறார்.
Download As PDF

Monday, October 14, 2013

அறிவை வணங்குவதே ஆயுத பூஜை!



தமிழும் ஆய்த எழுத்தும்!
தமிழ் எழுத்துக்களில் உயிர் எனவும் மெய் எனவும் உயிர்மெய் மற்றும் ஆய்தம் என எழுத்து வகைகள் உண்டு. இதில் ஆயுத எழுத்து என்பது மூன்று புள்ளிகள் மாத்திரமே! இந்த மூன்று புள்ளிகளை ஏன் ஆயுத எழுத்து என்று அழைத்தனர்? ஆயுதம் என்றால் காப்பது என்று பொருள். இந்த மூன்று புள்ளிகள் எதை காக்கிறது?

அகரம் உதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


அகரம் என்ற சொல்லிற்கு புள்ளி (ஆதியாய் நின்ற அறிவு) என்று பொருள். அதுவே விரிந்து உகரமாகவும் மகரமாகவும் உள்ளது. மூன்றும் ஏகமாய் நின்ற நிலை ஓங்காரமாகும். இந்த மூன்று புள்ளிகளும் சூரிய,சந்திர அக்னி கலைகளை குறிக்கிறது. இந்த அக்னி கலையில் உதித்தவனே வேலாயுத தமிழ் கடவுள்.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! என்பது தமிழ் மரபு. உகரமாகிய சந்திர கலை பதினாறாகும். உகரமாகிய அருளில் நின்றதால் குமரன் சக்தி வேலவனானான். எச்செயலையும் தொடங்குவதற்கு முன் பிள்ளையார் சுழியாய் இந்த உகரத்தை இடுவதுண்டு. மேலும் இந்த கலைகளை பற்றிய அறிவே கலாசாரம் எனப்பட்டது.

இந்த மூன்று புள்ளிகளும் ஆதியாய் நின்ற அறிவின் குறியீடுகள் ஆகும். அறிவே கலைகளின் இருப்பிடம். மனிதனை ஞானத்தின் எல்லைக்கு அழைத்து செல்லும் வாயில். ஆயுத பூஜை என்பது ஆயுதங்களை வணக்குவதல்ல! அவற்றை செயல்படுத்தும் அறிவை வணங்குவதே!
Download As PDF