Sunday, June 10, 2012

தியானம் என்பது என்ன?


தியானம் என்பது என்ன என்பதை ஒருமுறை நீங்கள் உணர்ந்துக் கொண்டால் இங்கே உள்ள அனைத்தும் தெளிவாகிவிடும். இல்லையெனில் இருட்டில் குருட்டுத்தனமாக உலாவ வேண்டிவரும்.

தியானம் என்பது அறிவின் தெளிவு!. 
அது மனதின் நிலையல்ல. 
மனம் ஒருபோதும் தெளிவடைவதில்லை.
மனம் என்பது குழப்பமே!
எண்ணங்கள் உங்களை சுற்றி மேக மூட்டங்களையே ஏற்படுத்தும்.


அவை உண்மையை மறைக்கும் பனிமூட்டங்களே!
எப்போது எண்ணங்கள் முழுமையாக மறைகிறதோ,
மேலும் உங்களை சுற்றி பனிமூட்டங்கள் இல்லையோ
அதுவே தெளிவின் ஆரம்பம்.
மனம் இறக்கும் இடமே அறிவின் தெளிவு!
அனைத்தும் தெளிவாக விளங்கும் நிலை!
இங்கே அனைத்திலும் அந்த முழுமையின் வெளிபாட்டை காண்பீர்கள்.

அந்த முழுமையே உங்களிலும் நிறைந்திருப்பதை உணர்வீர்கள்!

தியானம் என்பது தெளிவு!
முழுமையான விழிப்புணர்வு!
அதை உங்களால் எண்ணமுடியாது!
உங்களின் எண்ணங்களை கைவிடுங்கள்!
அது போதும்..!!!
Download As PDF

No comments: