Wednesday, February 29, 2012

எல்லாம் நம்ம கையிலே!


ஒருசமயம் இரண்டு சிறுவர்கள் அவ்வூரில் வசிக்கும் துறவி ஒருவரை சோதிக்க எண்ணி சிறிய குருவி ஒன்றினைப் பிடித்தார்கள். அதில் ஒருவன் அக்குருவியை தன் பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான்.நேரே அவரிடம் சென்றனர்.

ஐயா! என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?" என்று கேட்டான்.ஒருவேளை அவர் குருவி "இறந்து விட்டது" என்று கூறினால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது, அப்படி இல்லாமல் "உயிருடன் உள்ளது" என்று கூறினால் தன்னுடைய கைகளால் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது என்று மனதிற்குள் முடிவெடுத்தனர்.

அவர்களின் சூழ்ச்சியை அறிந்த அவர் , "இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

இந்த உவமையினால் அறியும் நீதியாவது அந்த குருவி நம் வாழ்க்கையையும், அந்த சிறுவர்கள் நம்மையும் உணர்த்துகிறது !

நம் வாழ்க்கையை அழிப்பதும்,சிறக்க வைப்பதும் நம் கையில் தானே உள்ளது!!
Download As PDF

No comments: