Thursday, November 24, 2011

கடலில் வாழ்தாலும் நீரை தேடும் மீன்கள் நாங்கள்!

பொருளிலெல்லாம் மிகப்பெரிய பொருள் இறைவன்.
ஆனால் அது யாருக்கும் புலப்படுவதில்லை.
பெருங்கூச்சலிட்டு அழைப்பவன் இறைவன்.
ஆனால் அவன் அழைப்பை யாரும் கேட்பதில்லை.

மிக அருகில் இருப்பவன் இறைவன்.
ஆனால் யாரும் அவனை உணர்வதில்லை.
எல்லோர்க்கும் அவன் தன்னை பங்கிட்டுக் கொடுத்திருக்கிறான்.
ஆனால் அவன் பெயர் யாருக்கும் தெரிவதில்லை. 

உண்மைதான்....
சுவாசித்துக் கொண்டிருந்தாலும் விடும் மூச்சை மறந்தவர்கள் 
நாங்கள்!சூரியனின் பிரகாசத்தில் உலவினாலும் அவனை பற்றிய 
எந்த சுவாதினமும் இல்லை எங்களுக்கு!
கடலில் வாழ்தாலும் நீரை தேடும் மீன்கள் நாங்கள்!

உடன் இருந்தாலும் மறப்போம்,
முடிந்தால் மறுப்போம் அவன் இல்லையென்று!
Download As PDF

3 comments:

Karthikeyan said...

சரியான கோணம் கோணத்தை புலப்படுத்தும் சொற்கள் அருமை

போதி மாதவன் said...

அருமையான சிந்தனை..

போதி மாதவன் said...

அருமையான வரிகள்..