Friday, November 11, 2011

அனுபவம்-அனுபவிப்பவனுக்கு மட்டுமே சொந்தம்


முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்கு தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல்லேன்றால் சொல்லுமாறு எங்ஙனே.


சொல்லித் தெரிவதில்லை மன்மதகலை என்பார்கள்.
சிற்றின்பத்தை பற்றி எந்த அறிவும் இல்லாவிட்டாலும்
திருமணம் நடந்தவுடன் அதன் சுகத்தை உணர ஒரு துணை
இருந்தால் போதும்.அதன் அனுபவம் அவரவருக்கு வந்துவிடும்.

அதைவிடுத்து அதை வேறு எந்த உரையாலும்,அடுத்தவரின் அனுபவத்தாலும் 
உங்களுக்கு அந்த அனுபவத்தை பெற முடியாது.

உலகியலின் சிற்றின்பத்திற்கே இந்த நிலையென்றால்
மனவாக்கிற்கு எட்டாத பேரின்பத்தை வார்த்தைகளால்
எப்படி விளக்குவது?அதற்கும் ஒரு துணை தேவை.

நான் என்று உணர்விற்கு ஆதாரமான உணர்வினை
நீங்கள் உணராதவரை ஆத்மசுகத்தை உணர இயலாது.

நான் என்னும் எண்ணமும் தோன்றி மறையும்.தோன்றி,மறைவதற்கு 
ஒரு ஆதாரம் தேவை.நீங்கள் இருப்பதினால் நினைகின்றீர்களா? 
அல்லது நினைப்பதனால் இருகின்றீர்களா?
உங்களின் இருப்பை உணர நினைக்க வேண்டியது இல்லை.

அந்த இருப்பை உணர்ந்து நிற்கும் போது நான் என்னும்
முதல் எண்ணமும் கரைந்து அது மாத்திரமாய் நிற்கும்.
இது வார்த்தைகளால் எட்டும் நிலையல்ல.அனுபவம்.
அனுபவிப்பவனுக்கு மட்டுமே சொந்தம்

Download As PDF

No comments: