Thursday, November 10, 2011

இறைவனுடன் உரையாடலாம்.




இறைவனின் மொழி மௌனம்.
மனிதனின் மொழியோ வார்த்தைகளால் ஆனது.


வார்த்தைகளே உலகத்தின் அனைத்து பிரச்சனைக்கும் 
காரணம்.ஆனால் உண்மையின் மொழியோ தூய்மையானது. 
மிக்க அமைதிமயமானது.அந்த முழு அமைதியின் குரலை 
நீங்கள் ஆன்மாவின் கீதம் என்றும் அழைக்கலாம்.


நம்மில் பலரும் இந்த அமைதின் குரலை,
மனதில் சதா ஓடிக்கொண்டிருக்கும் வார்த்தைகளின் 
சத்தத்தில் இழந்திருக்கலாம்.ஆனால் அது தொடர்ந்து 
ஒலித்துக்கொண்டே இருக்கிறது.


"நான்" என்ற அகங்காரத்தின் விளைவால் அது கேட்பதில்லை.


உங்களின் உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் தொடர்ந்து கவனித்தால்,
நான் என்ற எண்ணத்தின் மறைவில் அந்த கீதத்தை கேட்கலாம்.
நான் என்ற எண்ணமே (அகங்காரமே) பல்வேறு குழப்பங்களையும்,
முரண்பாடுகளையும் தோற்றுவிற்கிறது. 


மனதின் கூச்சல்கள் நம் உண்மையான இருப்பின் அமைதியில் 
மறையும்வரை நாம் அதை உணர முடியாது.


வாழ்க்கையின் வெளிப்படைதன்மைகளை கடந்து,
எவரொருவர் தொடர்ந்து தன் உள்ளத்தில்அந்த அமைதியை 
தேட முயல்கிறாரோ அவர் அதன் கீதத்தை கேட்பார்.
அந்த மௌனத்தின் கீதம் தான் எல்லாவித ஞானங்களின் ஊற்றுக்கண்ணாய் இருக்கிறது.
அந்த மௌனத்தின் மொழியால் நாம் இறைவனுடன் உரையாடலாம்.
Download As PDF

No comments: