Saturday, May 28, 2011

இறைவனுக்கு அளிக்கும் ஒரே பரிசு.



மனிதனுடைய அன்புதான் அவன் இறைவனுக்கு அளிக்கும் ஒரே பரிசு.
மனிதனை சோதிப்பதற்காகவே முழுப்படைப்பும் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகில் நம்முடைய நடத்தையின் முலம் இறைவனை விரும்புகிறோமா?
அல்லது அவனுடைய பரிசுப் பொருள்களை விரும்புகிறோமா? என்பதை 
நாம் வெளிப்படுத்துகிறோம்.

நீங்கள் எல்லாவற்றையும் விட இறைவனைத்தான் விரும்பவேண்டும் 
என்று அவன் உங்களிடம் கூறமாட்டான்.ஏனெனில் எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல் உங்களுடைய அன்பு 
நிபந்தனையின்றி கொடுக்கப்படவேண்டும், 
என்று அவன் விரும்புகின்றான்.

இந்த பிரபஞ்ச லீலையின் முழு ரகசியமும் இதுதான்.நம்மை படைத்தவன் 
நம் அன்பிற்காக ஏங்குகிறான்.அவன் கேட்காமலேயே நாமாகவே 
முன்வந்து அதை அளிக்க வேண்டும் என அவன் விரும்புகிறான்.
நீ விரும்பி அழிக்காவிடின்அவன் அதை ஏற்கமாட்டான்.

இந்த உலகப்பந்தில் ஊர்ந்து செல்லும் சிறுமனிதர்களாக,
இறைவனது பரிசுப் பொருள்களுக்காக மட்டுமே அழுதுக்கொண்டு,
பரிசளிப்பவனை மறந்துவிட்ட வழிதடுமாறிய குழந்தைகளாக 
இருக்கும்வரை துன்பத்திலிருந்து மீள வழியில்லை. 
Download As PDF

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நன்றாக சொன்னீர்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அன்பின் உருவம்தான் கடவுள்...