Wednesday, December 28, 2011

இங்கு எல்லாம் நானே!



"நான்" ஓர் அறிமுகம்.

நான் பார்க்கிறேன்.ஆனால் நான் கண்ணல்ல!
நான் கேட்கிறேன்.ஆனால் நான் காதல்ல!
நான் முகர்கிறேன்.ஆனால் நான் மூக்கல்ல!

நான் சுவைக்கிறேன்.ஆனால் நான் நாக்கல்ல!
நான் உணர்கிறேன்.ஆனால் நான் சரீரமல்ல!
நான் நினைக்கிறேன்.ஆனால் நான் மனமல்ல!
புலனும்,மனமும் என்னையே ஆதாரமாக கொண்டு பிரகாசிக்கின்றன.


நான் இருக்கிறேன்...............
என்பதை உணர மேற்கண்ட ஏதும் தேவை இல்லை.


என் இருப்பு ஒன்றே போதுமானது!
என்னை தேடாதே!
ஏனெனில் உன் தேடுதலே-
நானாய் இருக்கிறேன்.

Download As PDF

1 comment:

போதி மாதவன் said...

நானும் அதையே தேடுகிறேன்.. அறிவிற்கு எட்டினாலும்.. ஆனால் உணர்வில் இன்னமும் அனுபவிக்க இல்லை..