Wednesday, May 11, 2011

நீங்களே "உண்மை" யாக மாறலாம்.



உண்மை என்பது ஒரு முடிவல்ல,
உண்மை என்பது நீங்கள் போய் சேரவேண்டிய இடமல்ல.

அது ஒரு வாழ்க்கை அனுபவம்.
உண்மையின் அருகில் செல்ல முடியாது.
அனால் நீங்களே "உண்மை" யாக மாறலாம்.

நீங்கள் யார்?
என்பதின் மூலத்தை அடைவதுதான் "உண்மை" என்பது.
உண்மை என்பது எப்போதும் இருக்கிறது.

நீங்கள் "உடல்" என்றும் "மனம்" என்றும்
சேர்த்துவைத்த குவியலே அதை மூடியிருக்கிறது.
இந்த எல்லைகளை தாண்டிய உயிர்த்தன்மை அது.

உங்கள் முட்டாள் தனங்களை எல்லாம் விட்டுவிட்டால்
பிறகு "நீங்கள்" என்பதே உண்மைதான்.

முட்டாள்தனமென்பது உங்கள் உடலில்,மனதில்
"நான்" என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ
அந்த அடையாளங்களைத்தான் சொல்கிறேன்.
Download As PDF

1 comment:

vetha (kovaikkavi) said...

மிக வித்தியாசமான ஆக்கங்களாக உள்ளது. பிடித்திருக்கிறது. மகிழ்ச்சி.
vetha. Elangathilakam.
Denmark.